39. என் எழுத்துக்கள் மூலம்

35 5 2
                                    

💞 உன் மீதான என் அன்புக்கு
இன்னும் உயிரூட்டிக்
கொண்டிருக்கிறேன்..
நம் பிரிவுத் துயரை
மீண்டும் மீண்டும்
நினைவூட்டி மீளாத் துயரில்
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்..

இனி கிடைக்கவே மாட்டாத
உன் துளி அன்பிற்காய் இன்னும்
தவித்துக் கொண்டிருக்கிறேன்..
இவ்வெழுத்துக்களால்
இறந்து போன
நம் உறவை உயிரூட்ட முடியுமென
நான் எண்ணவில்லை..
ஆனால்,,
கை கூடாத நம் நேசம்
காலம் கடந்தாலும்
என் எழுத்துக்களில் வாழும்
என நம்புகிறேன்..
அதனாலேயே இன்னும்
எழுதிக் கொண்டிருக்கிறேன்....😔

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now