47. சில வேளை

44 4 2
                                    

💞 சில வேளை....
நீ பிரிந்து இத்தனை
நாட்கள் கடந்து
போன பின்னும் நான்
என்ன செய்து
கொண்டிருக்கிறேன் என
நீ எண்ணக் கூடும்..

இதோ உனக்கான பதில்கள்....

மணிக்கணக்கில் நாம்
பேசிய உரையாடல்களை
நினைத்துப் பார்த்த படி,,
விழிக்கிடையில் வழியும்
கண்ணீரை துடைத்துக்
கொண்டிருக்கிறேன்..

அழித்திட மனமின்றி,,
நீ அனுப்பிய பழைய
குறுஞ்செய்திகளை
மீண்டும் மீண்டும் படித்துக்
கொண்டிருக்கிறேன்....

சேமித்து வைத்த
உன் குரலோசைகளை
மீண்டும் மீண்டும்
கேட்டு கேட்டு என் உயிரின்
ஆழத்தில் புதைத்து
கொண்டிருக்கிறேன்....

யார் யாரோ யாருக்கோ
எழுதிய கவிதைகளையும்,,
உனக்காக நான் எழுதிய
கவிதைகளையும்,,
எனக்கானதாக எண்ணி படித்துக்
கொண்டிருக்கிறேன்....
அதனிடையே
உன்னை பற்றியும் கிறுக்கிக்
கொண்டிருக்கிறேன்....

நமது உரையாடல்களின் நடுவே
நீ பாடிய பாடல்களை இன்னும்
ரசித்துக் கொண்டும்
செவிப்பறைகள்
வலிக்கும் வரை கேட்டுக்
கொண்டிருக்கிறேன்....

உறவுகளுக்கு
நடுவே இருந்தாலும்
உறவற்றுப் போன
உன்னைத் தான்,,
அவர்களிடத்திலும் தேடிக்
கொண்டிருக்கிறேன்....

அழித்து விட்டதாய் கூறிய
உன் புகைப்படங்களை
மீண்டும் மீண்டும்
கண்களுக்குள் புதைத்துக்
கொண்டிருக்கிறேன்....

இறுதியாக..,,
கலைந்து போன என் உலகில்
உனைப் பற்றிய
கவிதைகளை எல்லாம்
என் காதலின் இறுதி நினைவாக
பதிந்து கொண்டிருக்கிறேன்....🥺😒
உன்னை நினைத்து....

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now