26. நிலவாய் நான் விழியாய் நீ

48 5 10
                                    

💞 கவலை கையேந்திய என்
முகத்தை  பல நாள் கழித்து
வான்மதி காண நேர்ந்தது....

அப்போது,,,,

என் முகம் பாராது இத்தனை நாள்
எப்படி இயல்பாக
இயங்க முடிந்தது உன்னால்....
சொல்வாயா?
உன் குரல் கேட்க
குமுறி கொண்டு இருக்கிறேன்....

ஆனால்,,,,
என் நிலையை நீ
அறிந்திருக்க மாட்டாய்....
நான் தான் இயந்திர
பாவையாகி போனேனே
உன்னால்
இத்தனை நாளாய்....

உன்னை எதிர்பார்த்தே
என் எதிர்பார்ப்புகள்
ஏக்கங்களாய் மாறிப் போக
உன்னை எண்ணியபடி
உன்னை எதிர்பார்த்து
காத்திருக்கிறேன்
எங்கே உன் யன்னல் திறந்தாவது
என்னை ஒரு முறை
உன் விழியால்
பார்த்து ரசிப்பாய் என
ஏக்கமாய்....😒

நிலவாய் நான் விழியாய் நீ
..NR..

அவளும் நானும்Where stories live. Discover now