10. சிறை

59 7 17
                                    

💞 உன் குரல் கேட்காது
என் நாட்கள்
யுகமாய் கடக்கிறது..

உன் பாஷைகள் எதுவுமின்றி
என் பொழுதுகள்
பாவமாய் விடிகிறது..

தூக்கத்தில் விழித்தால்
அலையும் விழிகளும்
அலைபேசியில் உன் அழகிய
பெயரை தான் தேடுகிறது..

கனவிலும் நீ பேசாத
நான் சொல்லாத
பலதையும் நீ கேட்க
சொல்லி சொல்லி தீர்க்கிறேன்..

இந்த தற்காலிக சிறை
ஆயுள் சிறையாய்
மாறுவதற்குள்
ஒரு முறையேனும்
அழைப்பு விடுத்து விடு
அவஸ்தைபடுகிறது மனது.... 😉

♡♡ சிறையாய் நீ
சிறைவாசம் நான் ♡♡

....♡ NR ♡....

அவளும் நானும்Where stories live. Discover now