உன்னிடம் பேச வேண்டும்
பேசியே ஆக வேண்டும் என்று
அவ்வப்போது அடம் பிடிக்கும்
என் மனதை அடக்கும் வழி தெரியாது
அதை பேசா மடந்தையாக்கி
என்னை நானே கட்டுப்படுத்தி
கடந்த நிமிடங்கள் தான்
எத்தனை எத்தனையோ?திடீரென பற்றிக் கொண்ட நெருப்பாய்
நினைவின் பக்கங்களில்
அவ்வப்போது புரண்டுக் கொள்ளும்
உன் பற்றிய ஞாபகங்களின்
பக்கங்களை மீட்டி பார்க்கும் தைரியமின்றி
அதை மூடும் வழி தெரியாது
அதிலிருந்து என்னையே மீட்டுக் கொள்ள
தவித்த நிமிடங்கள் தான்
எத்தனை எத்தனையோ?உன்னை நினைக்கும் போதெல்லாம்
என்னை மீறியும் கண்ணீர் சிந்தும்
என் விழிகளை கண்ணீர் சிந்தாமல்
தடுக்கும் வழி தெரியாது
கலங்கிய விழிகளுடன் கண்ணீர் கரைய
நகர்ந்த நிமிடங்கள் தான்
எத்தனை எத்தனையோ?இப்படி எத்தனை எத்தனையோ விடயங்கள்..
அத்தனை விடயங்களிலும்
மாறாத ஒற்றை விடயம்
நீ.. நீ மட்டுமே....இன்னும் எத்தனை எத்தனையோ?
உன் நினைவுகளில் கண்ணீர்
சிந்தும் விழிகளுடன்,
நிலா ரசிகன்..
YOU ARE READING
அவளும் நானும்
Poetryதுடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩❤️👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும் நானும்.. இப்படிக்கு, 🌛நி...