3 புதியவள்

1.4K 75 17
                                    

3 புதியவள்

அனைவருக்கும் தேநீர் பரிமாறிக் கொண்டிருந்தாள் மதிவதனி. அவளுடைய சித்தப்பா மகனான நிலவன், அவளுடைய சோகமான முகத்தை பார்க்கச் சொல்லி தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மகேந்திரனுக்கு சைகை செய்தான்.

"கூலா இருங்க மதி. அதான் டாக்டர் சினேகா இந்தியா வரேன்னு ஒத்துக்கிட்டாங்க இல்ல?"

"ஆமாம், கா. நிம்மதியா இருங்க நம்ம மமதி குட்டி நல்லா இருப்பா" என்றான் நிலவன்.

பெருமூச்சுவிட்டு அமர்ந்தாள் மதிவதனி.

"நீங்க இத்தனை டாக்டர்ஸ் இருக்கீங்க. ஆனா என்ன பிரயோஜனம்? நம்ம குழந்தையை காப்பாத்த, வேற ஒருத்தர்கிட்ட போய் கெஞ்ச வேண்டி இருக்கு...! உங்கள்ல யாராவது ஒருத்தர் கார்டியாலஜிஸ்ட் ஆகி இருக்கலாம் இல்ல?" என்றாள் மதிவதனி.

"அதை ஏன் கேக்குறீங்க, மதி...? எங்க ஃபர்ஸ்ட் கார்டியாலஜி கிளாஸ்லையே நான் கார்டியோலஜிஸ்ட் ஆகிறது இல்லன்னு முடிவு பண்ணிட்டேன்" என்றான் மகேந்திரன்.

"ஆனா ஏன்?" என்றாள் மதிவதனி.

"ஏன்னே தெரியல, எனக்கு கார்டியாலஜி லெசன் பிடிச்சதே இல்ல. அந்த கிளாஸ் வந்தாலே எனக்கு செம கடுப்பா இருக்கும். எங்க எல்லாருக்குமே கார்டியாலஜி லெசன்சை எப்பவுமே ஆர்த்தி தான் எக்ஸ்பிளைன் பண்ணுவா. அவ தான் கார்டியாலஜிஸ்ட் ஆகணும்னு ஆசைப்பட்டா. அவ இப்ப எங்க இருக்காளோ... எப்படி இருக்காளோ தெரியல..." என்றான் யாழினியனை ஓரக்கண்ணால்  பார்த்தபடி மகேந்திரன்.

அதைக் கேட்ட மதிவதனி பதற்றமானாள். தலை குனிந்த படி, தன் முஷ்டியை மடக்கிக் கொண்டு அமர்ந்திருந்த யாழினியனின் மீது அவள் பார்வை சென்றது. ஆனால் யாழினியனின் மனநிலையை பற்றி மகேந்திரன் சிறிதும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அது அவளுக்கு மேலும் ஆச்சரியம் அளித்தது. ஏனென்றால், யாழினியன் முன்பாக ஆரத்தியைப் பற்றி பேசுவதே இல்லை என்பதில், மற்ற அனைவரையும் விடவும் அவன் தான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பான். ஆனால் இன்று, அவன் வேண்டுமென்றே ஆர்த்தியை பற்றி பேசுவதாய் தோன்றியது மதிவதனிக்கு. ஆனால் ஏன் இப்படி செய்கிறான் என்று தான் அவளுக்கு புரியவில்லை.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now