29 யார் இவள்?
தனக்கு முன்னாள் வெட்க புன்னகை பூத்தபடி நின்றிருந்தவளை, அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றான் யாழினியன்.
முத்தம்மா? அவள் அவனை முத்தமிட்டாளா? தங்களது சண்டையை முடித்துக் கொண்டபின், எப்பொழுது அவர்கள் முத்தமிட்டு கொண்டார்கள்? இது என்ன குழப்பம்? அவர்கள் முத்தமிட்டுக் கொண்டது ஒரே ஒருமுறை... அவர்கள் தங்களை பகிர்ந்து கொண்ட அந்த ஒரு நாள் மட்டும் தான். அவர்களது சண்டைக்கு பின், அவள் அவனை அடித்து துவைப்பது தானே வழக்கம்? இந்த பெண்ணுக்கு என்ன ஆனது? ஏன் இவள் இப்படி விசித்திரமாய் நடந்து கொள்கிறாள்?
குழம்பித் தவித்தான் யாழினியன். அதே நேரம், அவனது கைபேசி ஒலித்தது. அந்த அழைப்பு மதிவதனியிடம் இருந்து வந்தது.
"சொல்லுங்க அக்கா"
"என்னோட ரூமுக்கு வா... உடனே... இப்பவே..."
"ஆனா அக்கா..."
"சொல்றேன்ல...? வான்னா வா..." என்று கட்டளை இடும் தோரணையில் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் மதிவதனி. இதற்கு முன், எப்பொழுதும் அவள் அவனிடம் அப்படி பேசியதில்லை.
"கொஞ்சம் இரு ஆரத்தி, நான் இப்ப வந்துடறேன்..."
அங்கிருந்து அவன் கிளம்ப முயன்ற போது,
"என்னை சினேகான்னு கூப்பிடுங்க, ப்ளீஸ். எனக்கு ஆரத்திங்கற பேர் பிடிக்கல"
ஒன்றும் கூறாமல் அவளை பார்த்துவிட்டு, அந்த இடம் விட்டு அகன்றான் யாழினியன்.
மதிவதனியின் அறைக்கு வந்தவன், அங்கு அனைவரும் கூடியிருந்ததை பார்த்து குழம்பினான். அதுவும் அனைவரது முகத்திலும் ஒருவித பதட்டம் தெரிந்தது.
"என்னாச்சு? மமதிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே???"
"யாழ், தயவுசெய்து கொஞ்சம் அமைதியா இரு" என்றாள் மதிவதனி.
"என்ன ஆச்சுன்னு சொல்லுங்கக்கா"
தன் கண்களை அனைவர் மீதும் ஓட விட்டான். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தவிப்பில் இருப்பதை உணர்ந்தான். அவனைக் கட்டிலின் மீது அமர வைத்தாள் மதிவதனி.
YOU ARE READING
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
Romanceமூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அ...