36 தொடரும் தவிப்பு...

1K 67 11
                                    

36 தொடரும் தவிப்பு...

அவர்களுடைய கரங்கள் ஒருவரை ஒருவர் தழுவிய அதே நேரம், அவர்களது கண்கள், கண்ணீரை சொரிந்து மற்றவர் தோளை நனைக்க தவறவில்லை. ஒரு வழியாய், அவர்கள் சேர வேண்டிய இடம் வந்து சேர்ந்து விட்டார்கள்.

"ஆர்த்தி..."

"யாழ்..."

அவர்களது பெயர்களை தவிர, வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை... தாங்கள், நடுச்சாலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதும், அவர்களை சுற்றி சில பேர் இருக்கிறார்கள் என்பதும் கூட அவர்களுக்கு நினைவில்லை. எதைப் பற்றியும் அவர்கள் யோசிக்கவில்லை... யோசிக்கவும் விரும்பவில்லை.

அவளைக் கீழே இறக்கிவிட்டு, அவளது நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்த யாழினியன், அவள் நெற்றியோடு தன் நெற்றியை இணைத்து,

"ஐ அம் சாரி... ஐ அம் ரியலி சாரி..." என்றான்.

"இதுல உன்னோட தப்பு எதுவும் இல்ல. நான் தான் சைல்ட்டிஷா நடந்துக்கிட்டேன். அந்த ஒரு தப்பை செஞ்சதுக்காக நான் நிறைய அனுபவப்பட்டுட்டேன்... ஐ அம் சாரி"

"இல்ல ஆர்த்தி... இதுல எல்லாரையும் விட அதிகமா இழந்தது நீ தான். உனக்கு மட்டுமே சொந்தமான எல்லாத்தையும் நீ இழந்துட்ட. உனக்குன்னு எல்லாரும் இருந்தும், எல்லாரும் உன் கூட இருக்க வேண்டிய நேரத்துல, யாரும் இல்லாம தனியா அவஸ்தை பட்டிருக்க..."

"ஆனா, ஒரு நாள் நிச்சயம் நான் உன்கிட்ட வந்துடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது"

"நீ எனக்கு கிடைச்சிடுவேங்குற நம்பிக்கை எனக்கும் இருந்தது"

உணர்ச்சி வசப்பட்டவளாய் அவனை அணைத்துக்கொண்டாள் ஆர்த்தி. யாழினியனும் அதையே செய்ய தவறவில்லை.

அப்பொழுது, வெங்கட்ராகவன் அவர்களுக்கு அருகில் நிற்பதை அவர்கள் கவனித்தார்கள். யாழினியனை விட்டு விலகி, அவரைப் பார்த்து புன்னகைத்தாள் ஆர்த்தி. என்றும் இல்லாத அளவிற்கு தன் மகளை எதிர்கொள்ள சங்கடப்பட்டார் வெங்கட்ராகவன். அவரது சங்கடத்திற்கு காரணம், சினேகா, ஆர்த்தியிடம், புனிதாவைப்  (சினேகாவின் அம்மா) பற்றி அனைத்தையும் கூறிவிட்டு இருப்பாள் என்பது தான். 

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now