5 யாழினியனின் காதல்

1.2K 73 15
                                    

5 யாழினியனின் காதல்

தனது அறையில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தாள் மதிவதனி. ஏன் திடீரென்று மகேந்திரன் ஆர்த்தியை பற்றி பேச வேண்டும்? ஆரத்தி விஷயத்தில் மகேந்திரன் யாழினியன் மீது கோபமாக இருந்தது உண்மை தான். ஆனால் ஒரு பொழுதும் அந்த விஷயத்திற்காக அவன் யாழினியனை காயப்படுத்தியதில்லை. ஒருவேளை, டாக்டர் சினேகாவின் குரலை கேட்டதற்கு பிறகு, அவனுக்கு ஆர்த்தியின் ஞாபகம் மேலோங்கி இருக்கலாம். ஆனால் எப்படி சினேகாவின் குரல், ஆர்த்தியின் குரலை போலவே இருக்கிறது?

முதல் முதலாக ஆர்த்தியின் குரலை கேட்ட தினம், மதிவதனியின் நினைவுக்கு வந்தது. அவள் பழைய நினைவில் மூழ்கினாள்.

அன்று, யாழினியன் அனைவருக்கும் விருந்து கொடுத்தான். மதிவதனிக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் அவள் குழந்தை பேரு இல்லாமல் இருந்தாள். ஆறு வருடத்திற்கு பிறகு, அப்பொழுது அவள் கருத்தரித்ததால், சந்தோஷத்தில், தன் நண்பர்களுக்கு விருந்து கொடுத்தான் யாழினியன். அனைவரும் அவரவர்களுக்கு பிரியமான உணவு வகைகளை ஆர்டர் செய்து கொண்டார்கள். ஆர்த்திக்கு பிடித்த மீன் வருவலை அவளுக்காக ஆர்டர் செய்தான் யாழினியன், மீன் வருவல் என்றால் அவளுக்கு பைத்தியம் என்று அவனுக்கு தெரியும்.

"இந்தா எடுத்துக்கோ"

அவளிடம் தட்டை நீட்டினான். அவனிடம் இருந்து அந்த தட்டை பிடுங்காத குறையாய் வாங்கிக் கொண்டாள் ஆர்த்தி. அந்த தட்டில் இருந்து ஒரு மீன் துண்டை எடுக்க முயன்றான் நிலவன்.

"உனக்கு வேணும்னா இன்னொரு பிளேட் ஆர்டர் பண்ணிக்கோ" என்றான் யாழினியன்.

பியரரை அழைத்து, மேலும் ஒரு மீன் வருவல் கொண்டு வரச் சொன்னான்.

"பரவாயில்ல, யாழ்" என்று தட்டை நிலவனை நோக்கி நீட்டிய ஆர்த்தி,

"எடுத்துக்கோ" என்றாள்.

"ஆர்த்தி, வெயிட்... நான் தான் அவனுக்கு ஆர்டர் பண்ணிட்டேன்ல? நீ சாப்பிடு" என்றான் யாழினியன்

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now