41 யாழினியனின் திட்டம்.
"இப்படித் தான், நான் உரிமையோடு உன் கூட இருக்கணும்னு நெனச்சேன்" என்றான் யாழினியன்.
"அந்த உரிமையை நான் உனக்கு எப்பவோ கொடுத்துட்டேனே" என்றாள் ஆரத்தி
"அது எனக்கு மட்டும் தானே தெரியும்? இப்போ பாரு யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது"
"உண்மை தான். இனிமே, யாரும் உன்னை கேள்வி கேட்க மாட்டாங்க..."
"அது தான் எனக்கு வேணும்"
"சரி, தூங்கலாம்" என்றாள் ஆரத்தி.
"என்னது? தூங்கலாமா?" என்று அதிர்ந்தான் யாழினியன்.
"வேற என்ன செய்யறது?" என்றாள் சிரிப்பை அடக்கியபடி.
"மகேந்திரனும், நிலவனும் எவ்வளவு கஷ்டப்பட்டு தியாவை பாட்டி கூட அனுப்பி வச்சாங்கன்னு உனக்கு தெரியுமா?"
தெரியாது என்று தலையசைத்தாள் ஆர்த்தி.
"பாவம் அவனுங்க... குரங்கு கதை எல்லாம் சொல்லி, தியாவை பாட்டி பக்கம் திசை திருப்புறதுக்குள்ள அவங்களுக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு."
"அப்படியா?"
"ஆமாம். நம்ம ஒண்ணுமே செய்யாம தூங்கிட்டோம்னு தெரிஞ்சா, அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க" என்றான் வருத்தத்துடன்.
"ஓஹோ... அவங்களுக்காக மட்டும் ( என்பதை அழுத்தி) தான் நீ தூங்க வேண்டாம்னு நினைக்கிறாயா?"
"அவங்களுக்காகவும் ( என்பதை அழுத்தி )தூங்க வேண்டாம்னு நினைக்கிறேன்... எல்லாத்துக்கும் மேல, நான் உன்கிட்ட சொல்லாம போன ஒரு முக்கியமான விஷயத்தை உன்கிட்ட சொல்லணும்"
"என்ன விஷயம்?"
"நான் என் காதலை உன்கிட்ட எதுக்காக சொல்லாம இருந்தேன் தெரியுமா?"
தெரியாது என்று தலைசைத்தாள் ஆர்த்தி.
"எங்கப்பா மரண படுக்கையில் இருந்தப்போ, என்கிட்ட ஒரு சத்தியம் வாங்கிட்டாரு"
"என்ன சத்தியம்?"
"நான் டாக்டர் ஆகணும்னு அவருக்கு ஆசை..."
YOU ARE READING
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
Romanceமூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அ...