47 புனிதாவை பற்றி...

890 64 8
                                    

47 புனிதாவை பற்றி...

புனிதாவின் திடீர் வருகை ஆர்த்தியை ரொம்பவே குழப்பியது. இந்த விஷயத்தில் வெங்கட்ராகவனின் முடிவு என்னவாக இருக்கும் என்பது அவளுக்கு புரியவில்லை. என்னவாக இருந்தாலும், அவள் அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள தயாரானாள் ஆர்த்தி. தன் கடந்த காலத்தில் நடந்தவை, அவளுக்கு ஏமாற்றத்தையும், பயத்தையும் அளித்திருந்தாலும், அனைத்தையும் எதிர்கொள்ளும் திறனும் அவளுக்கு வந்துவிட்டிருந்தது. ஏனென்றால் இதற்கு மேல் இழப்பதற்கு எதுவும் இல்லை அல்லவா...! ஆனால், யாழினியன், தியா என்று வந்து விட்டால், அவள் அதே தைரியத்துடன் இருப்பாளா என்பதை நாம் கூறுவதற்கில்லை.

அவள் உள்ளக்கிளர்ச்சியை புரிந்து கொண்டான் யாழினியன். அவளை தேவையில்லாத விஷயத்தில் அவன் இழுத்து விட்டு விட்டானோ?  ஏற்கனவே அவள் வாழ்க்கையில் அடிபட்டு நொந்து போயிருக்கிறாள். இன்னுமும் கூட பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவளை துரத்திக் கொண்டே தான் இருக்கிறது. எப்பொழுது தான் அவள் அனைத்திலுமிருந்து விடுபட போகிறாளோ...!

அப்பொழுது, ஒரு பை நிறைய இனிப்பும், கார பலகாரமுமாக அவர்கள் அறைக்கு வந்தார் வெங்கட்ராகவன். அவர் கொண்டு வந்த பையை ஆர்த்தியிடம் கொடுத்தார். அதிலிருந்த ஒரு பார் சாக்லேட்டை எடுத்து அதை தியாவிடம் நீட்டினாள் ஆர்த்தி. அதை ஆசையுடன் பெற்றுக் கொண்டாள் தியா.

"என்ன அங்கிள் இதெல்லாம், ஒரு கடையையே பிடிச்சுகிட்டு வந்து இருக்கீங்க...?" என்றான் யாழினியன்.

"இதெல்லாம் ஆர்த்திக்கு பிடிச்ச ஸ்வீட் அண்ட் ஸ்நாக்ஸ்..." என்றார் வெங்கட்ராகவன்.

"டாட், நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்"

தானாகவே புனிதாவை பற்றி அவரிடம் கூற நினைத்தாள் ஆர்த்தி.

"என்ன விஷயம் சொல்லுடா"

ஆர்த்தி எதுவும் கூறுவதற்கு முன்,

"தியாவோட ஸ்கூல் அட்மிஷன் முடிஞ்சிடுச்சு அங்கிள்" என்றான் யாழினியன் அவளை பேசவிடாமல்.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now