12 உனக்காகத் தான்
ஆர்த்தி அணிந்திருந்த உடையை பார்த்து கோபம் பொத்துக் கொண்டு வந்தது யாழினியனுக்கு. மகேந்திரனும், நிலவனும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டார்கள். யாழினியனின் முகத்தை பார்க்கவே வேடிக்கையா இருந்தது அவர்களுக்கு. அவன் கோபம் அதிகமாகிக் கொண்டே சென்றது, அனைவரது பார்வையும் ஆர்த்தியின் மீது குவிந்தபோது. சில மாணவர்கள் அவளை நோக்கி ஓடிவந்து அவளுக்கு ரோஜாப்பூ கொடுத்தார்கள். அவர்களிடமிருந்து அந்த பூவை பெற்றுக் கொள்ளாமல், தங்கள் நண்பர்களை நோக்கி ஒயிலாய் நடந்து வந்தாள் ஆரத்தி.
"நீ தான் இன்னைக்கு நம்ம காலேஜோட ஹீரோயின்" என்றான் மகேந்திரன்.
"இன்னைக்கு உன்னை நிறைய பேர் ப்ரொபோஸ் பண்ண போறாங்க" என்றான் நிலவன்
"யூ ஆர் லுக்கிங் சோ ஹாட்" என்றாள் மைதிலி.
தான் அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து எதிரி குதித்தான் யாழினியன். அவள் கையைப் பிடித்து சற்று தூரமாய் இழுத்துச் சென்றான்.
"என்ன டிரஸ் பண்ணிக்கிட்டு வந்திருக்க நீ?
"ஏன், இது நல்லா இல்லயா? பாரு எல்லாரும் என்னைத் தான் பாக்குறாங்க"
"ஷட் அப்... போய் இந்த டிரஸை சேஞ்ச் பண்ணிட்டு வா"
"என்ன்னனது? முடியாது"
"ஆர்த்தி, என் கோபத்தை கிளறாத"
"இப்போ என்னால ஹாஸ்டலுக்கு போக முடியாது. ஹாஸ்டலுக்கு போயி, டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு திரும்பி வர எப்படியும் ஆஃப் ஆன் ஹவர் மேல ஆயிடும். நான் ஃபர்ஸ்ட் பீரியடை மிஸ் பண்ணுவேன்"
"சரி, என் கூட வா"
அவளை பார்க்கிங் லாட்டுக்கு அழைத்து வந்து, தான் வாங்கி வைத்திருந்த உடையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
"இந்த டிரஸை போய் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வா"
"இது யாரோட டிரஸ்?"
"எனக்கு தெரியாது"
"அப்படின்னா, இது எனக்கு வேண்டாம். மத்தவங்க ட்ரெஸ் எல்லாம் நான் போட மாட்டேன் "
YOU ARE READING
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
Romanceமூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அ...