27 இந்தியாவில் புனிதா
"என்ன யோசிச்சுகிட்டு இருக்க?" என்ற நிலவனின் கேள்வியை கேட்டு தலையை உயர்த்தினான் மகேந்திரன்.
"நானும் உன்னை கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன். எதுக்காக இவ்வளவு டிஸ்டர்ப்டா இருக்க? காலையிலிருந்தே நீ சரி இல்ல. என்ன ஆச்சு உனக்கு?"
"ம்ம்ம்" என்றான் மகேந்திரன்.
"நீ மமதியை நெனச்சு பயப்படுறியா?"
"இல்ல"
"அப்புறம் என்ன?"
"யாழ் பெங்களூர்ல இல்ல"
"அப்படின்னா வேற எங்க போனான்?"
"ஆர்த்தியை பத்தி தெரிஞ்சிக்குறதுக்காக அவன் லண்டனுக்கு போயிருக்கான்னு நினைக்கிறேன்"
"அப்படியா சொல்ற? உன்னோட ஃப்ரெண்ட் டாக்டர் ரோஸ் தான் அங்க இருக்காங்களே... அவங்களுக்கு கால் பண்ணி பாரேன்... ஒருவேளை அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம்"
"தேவையில்ல... அவனோட சந்தேகத்தை அவன் கிளியர் பண்ணிக்கிட்டு வரட்டும்"
"சரி, அப்புறம் ஏன் அப்செட்டா இருக்க?"
"அப்செட்டா இல்ல... நெர்வஸ்ஸா இருக்கேன்"
"ஏன் மகா?"
"மைதிலி சொன்னதை நீ மறந்துட்டியா?"
"நீ எதை பத்தி சொல்ற?"
"ஆர்த்தியை பத்தி தான்... பிளட் டொனேட் பண்ண ஆர்த்தி எந்த ஆர்வமும் காட்டலைன்னு மைதிலி சொன்னா இல்ல?"
"ஆமாம் சொன்னா..."
"இந்த அளவுக்கு அடியோடு யாராவது மாற முடியும்னு நீ நினைக்கிறியா? நம்மளை நேரில் பார்த்தப்போ, ஒரு துளி சந்தோஷம் கூட சினேகா முகத்தில் தெரியல. நம்மளோட ஆரத்தி இப்படி இருக்க மாட்டா நிலவா..." என்றான் வருத்தமாய்.
"சரி, நீ என்ன செய்யணும்னு நினைக்கிற?"
"யாழ் இந்தியாவுக்கு திரும்பி வர்றதுக்கு முன்னாடி, அவ சினேகாவா, இல்ல ஆரத்தியான்னு நம்ம கண்டுபிடிச்சு ஆகணும்"
YOU ARE READING
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
Romanceமூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அ...