55 இறுதி பாகம்
ஒரு மாதத்திற்கு பிறகு
சினேகாவின் அறையின் கதவைத் தட்டினார் வெங்கட்ராகவன். கதவை திறந்த சினேகாவை நோக்கி தன் கைபேசியை நீட்டி,
"உனக்கு ஃபோன் மா" என்றார்.
அவரிடமிருந்து கைபேசியை பெற்றுக்கொண்ட சினேகா, அந்த அழைப்பு ஸ்டெஃபியிடம் இருந்து வந்திருப்பதை பார்த்து வியந்தாள். தயக்கத்துடன் அந்த அழைப்பை ஏற்றாள். அவர் ஏன் அவளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்று அவளுக்கு புரியவில்லை.
"நான் ஸ்டெஃபி பேசுறேன்"
"ஹலோ டாக்டர்"
"எப்படி இருக்க?"
"இருக்கேன்"
"நீ எதுவும் செய்யாம சும்மா இருக்கிறதா கேள்விப்பட்டேனே... அது உண்மையா?"
சினேகா அமைதி காத்தாள்.
"நீ ஒரு திறமையான டாக்டர். உன்னோட பொட்டன்ஷியல் வீணாக கூடாது"
"நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும்..."
"உன்னோட சொந்த வாழ்க்கையை தள்ளி வச்சிட்டு பார்த்தா, நீ ஒரு நல்ல டாக்டர். நம்ம ஹாஸ்பிடலுகாக பல வருஷம் நீ வேலை செஞ்சிருக்க. அந்த காலகட்டத்தில் உன் மேல எந்த கம்பளைண்டும் வந்ததில்ல. நீ மறுபடியும் வேலையில் சேரனும்னு நான் நினைக்கிறேன்"
தன்னை நிரூபித்துக் காட்ட தனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்பதை சினேகாவால் நம்ப முடியவில்லை.
"நீங்க நெஜமாத்தான் சொல்றீங்களா டாக்டர்?"
"ஆமாம்"
"ஆனா, நான் நாலு வருஷம் ஜெயில்ல இருந்திருக்கேன்"
"உனக்கு மறுபடியும் இங்க வர சம்மதம்னா, உங்க அப்பா அதையெல்லாம் கவனிச்சிக்குவாரு. அவருக்கு இந்தியாவில ரொம்ப பெரிய பவர் இருக்குன்னு எனக்கு தெரியும்"
"ஆனா பேஷண்ட்ஸ் என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்க தயங்கலாம்..."
"நாங்க உன்னை பத்தின எந்த உண்மையையும் இங்க யார்கிட்டயும் சொல்லல. எல்லாரும் நீ இந்தியாவில் செட்டில் ஆனதா தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க"
YOU ARE READING
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
Romanceமூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அ...