16 உடைந்த கட்டுப்பாடு
இறுதி நாளுக்கு முந்தைய நாள்
அனைவரது முகமும் வாட்டத்துடன் காணப்பட்டது."நம்ம எல்லாரும் பிரிய போறோம்" என்றான் கவலையுடன் நிலவன்.
"ஆமாம்... இவ்வளவு நாள் வரைக்கும், ஜாலியா காலேஜ் லைஃபை என்ஜாய் பண்ணிக்கிட்டு இருந்தோம்... இதுக்கு அப்புறம் நமக்கு நிறைய பொறுப்புகள் காத்துக்கிட்டு இருக்கு" என்றாள் மைதிலி.
"நீயும் ஆர்த்தியும் ஸ்பெஷலிஸ்ட் ஸ்டடீஸ்க்கு போறீங்க. நாங்க எல்லாரும் வேற வேற ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ண போறோம்" என்றாள் வானதி.
"அது பர்மனென்ட் இல்ல. சீக்கிரமே நம்ம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து, ஒரே இடத்துல வேலை பார்ப்போம்" என்றான் மகேந்திரன்.
"மகா சொல்றது சரி தான். நம்ம எல்லாரும் யாழ் ஹாஸ்ப்பிட்டல்ல சீக்கிரமே ஒன்னா சேருவோம்" என்றான் நிலவன்.
"நம்ம ஏன் ஒரு பார்ட்டி கொண்டாடக் கூடாது? நம்ம மட்டும் சேர்ந்து?" என்றான் மகேந்திரன்.
"நல்ல ஐடியா" என்றாள் மைதிலி.
"ரிமார்கபுலா இருக்கும்..." என்றான் நிலவன்.
"என்னைக்கு?" என்றாள் ஆர்த்தி.
"இன்னைக்கு சாயங்காலம்" என்றான் மகேந்திரன்.
"எங்க?" என்றாள் வானதி.
"யாரோட வீட்ல வச்சுக்கலாம்?" என்றான் கதிரவன்.
"யார் வீட்டிலயும் வேண்டாம். அது நமக்கு கம்ஃபர்டபிலா இருக்காது. நம்ம வீட்டு ஆளுங்க நம்ம கூட வந்து உட்கார்ந்துகிட்டு, நம்மள என்ஜாய் பண்ண விட மாட்டாங்க." என்றான் மகேந்திரன்.
"சந்தேகமே இல்ல அப்படித் தான் நடக்கும். அப்புறம் அது ஃபிரண்ட்ஸ் பார்ட்டியா இருக்காது" என்றான் யாழினியன்.
"யாழுடைய பார்ம் ஹவுஸில் வச்சுக்கலாமா?" என்றான் மகேந்திரன்
"இது நல்ல ஐடியா" என்றான் நிலவன்.
"அப்படின்னா சரி. ஆர்த்தியை நான் பிக்கப் பண்ணிக்கிறேன்" என்றான் யாழினியன்.
YOU ARE READING
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
Romanceமூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அ...