32 சினேகா ஆடிய ஆட்டம்

1K 65 9
                                    

32 சினேகா ஆடிய ஆட்டம்

நிலவன் எடுத்துக் கொடுத்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சினேகா. தன்னை தானே நினைத்து பெருமைப்பட்டு சிரித்தாள். *நான் ஆரத்தி அல்ல* என்று கூறியே  யாழினியனை தான் ஏமாற்றிய விதத்தை எண்ணி மகிழ்ந்தாள். தான் வழக்கமாய் செய்வது போல், தன் கையில் இருக்கும் புகைப்படத்தை, உடனே ஆரத்தியிடம் காட்ட வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. ஆனால் அதை யாழ் இல்லத்திலிருந்து செய்து, பிரச்சனையை தேடிக்கொள்ள அவள் விரும்பவில்லை.

*என்னுடைய வாழ்க்கை, எவ்வளவு அழகா, நான் பிளான் பண்ண படியே போய்ட்டு இருக்கு...! என் வாழ்க்கையோட முதல் பாதி நான் விரும்பியபடி அமையலைனாலும்... இரண்டாவது பாதி, முழுக்க முழுக்க என்னோட கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கு. கடவுளோட விருப்பம் கூட இது தான் போல இருக்கு... ஆர்த்தியை பெத்த அப்பாவுக்கே என் மேல சந்தேகம் வரலையே...! உன் தலையெழுத்தை அடியோட மாத்த போற போட்டோவை நாளைக்கு நீ பார்க்க போற ஆர்த்தி... நான் சொன்ன மாதிரியே உன்கிட்ட இருந்து எல்லாத்தையும் பறிச்சிட்டேன்... உன் அப்பா, உன் குழந்தை, சீக்கிரமே உன்னோட யாழினியனையும்...* என்று எண்ணி சிரித்தபடி கட்டிலில் விழுந்தாள் சினேகா.

தன் வாழ்க்கையை மாற்றி போட்ட அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள் அவள்.

12 வருடங்களுக்கு முன்
சென்னையின் புறநகர் குடியிருப்பு பகுதி.

சென்னையின் புறநகர், இப்பொழுது இருப்பது போல் வளர்ச்சி அடையாத காலகட்டம் அது. சாலை வசதிகள் எல்லாம் அப்போது தான் விரிவாக்கம் செய்ய துவங்கப்பட்டிருந்தது.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்த சினேகா, கல்லூரியில் சேர்ந்தது குறித்து தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு அரசு கலைக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. அப்பொழுது, அவளுடைய தோழி லட்சுமி அவளை நோக்கி ஓடி வந்தாள்.

"சினேகா, இங்க பாரு..." தன் கையில் இருந்த நாளிதழின் ஒரு பகுதியை அவளிடம் நீட்டினாள்.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now