46 ஆர்த்தியின் கோணம்
தியாவின் பள்ளி சேர்க்கை முடிந்தது. அவளுக்கு புதிய பள்ளி மிகவும் பிடித்து விட்டது. அது அவளுடைய பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. பள்ளியை விட்டு திரும்பும் வழியிலேயே தியாவின் பள்ளிக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தார்கள். எல்லா பொருள்களையும் இரண்டு இரண்டாக வாங்கிக் கொண்டாள் தியா, மமதிக்கும் சேர்த்து.
"மமதி எப்போ மா ஸ்கூலுக்கு வருவா?" என்றாள் தியா.
"அவ ஸ்கூலுக்கு வர டைம் ஆகும். அவ கம்ப்ளீட்டா க்யூர் ஆகணும் இல்ல? அதுக்கப்புறம் தான் அவ ஸ்கூலுக்கு வருவா"
"நம்ம எங்கம்மா போறோம்?" என்றாள் தியா.
அப்பொழுது தான் தாங்கள் வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல், வேறு வழியில் பயணித்துக் கொண்டிருந்ததை கவனித்தாள் ஆர்த்தி.
"யாழ், நம்ம தான் ஷாப்பிங்கை முடிச்சிட்டோமே... அப்புறம், இப்போ நம்ம வேற எங்க போய்கிட்டு இருக்கோம்?"
"ஹாஸ்பிடலுக்கு போறோம்"
"ஆனா எதுக்கு? இன்னைக்கு ஓபி ஐ தான் மகா பாத்துக்குறேன்னு சொல்லிட்டானே..."
"ஆமாம், அவன் தான் பார்க்கப் போறான்"
"அப்படின்னா, நம்ம மமதியை பார்க்க போறோமா?"
அவளுக்கு பதில் சொல்லாமல் புன்னகைத்தான் யாழினியன்.
"அதுக்காகவா போறோம்?"
ஆமாம் என்று தலையசைத்தான் யாழினியன்.
"மமதி எப்ப பா வீட்டுக்கு வருவா?" என்றாள் தியா.
"இன்னும் ரெண்டு மூணு நாள்ல வந்துடுவா"
"நெஜமாவா?" என்றாள் தியா குதூகலமாக.
"அவ வீட்டுக்கு வந்ததுக்கு பிறகு அவளை தொந்தரவு செய்யக்கூடாது" என்றாள் ஆரத்தி.
தியா எதுவும் கூறுவதற்கு முன்,
"அவ தொந்தரவு செய்ய மாட்டா. அவ ரொம்ப நல்ல பொண்ணு. எல்லாத்தையும் நல்லா புரிஞ்சுக்கிறவ. நான் சொல்றது சரி தானே தியா?" என்றான் யாழினியன்.
YOU ARE READING
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
Romanceமூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அ...