26 எங்கே யாழினியன்?

1K 72 14
                                    

25 எங்கே யாழினியன்?

இந்தியா

மமதியின் அறுவை சிகிச்சைக்கு அனைத்தும் தயார். மகேந்திரனும் மற்றவர்களும் இணைந்து அனைத்து வேலைகளையும் கச்சிதமாய் செய்து முடித்து இருந்தார்கள். திட்டமிட்டபடி சரியாய் இரவு பத்து மணிக்கு அறுவை சிகிச்சை துவங்க இருந்தது. என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் கட்டளையிட்டு விட்டு, மதியான வாக்கில், யாழ் இல்லம் சென்றாள் சினேகா. இரவு முழுதும் கண்விழித்து அறுவை சிகிச்சை செய்ய, அவள் உறங்கியாக வேண்டும். அவளுடன் அறுவை சிகிச்சையில் கலந்து கொள்ள இருக்கும் மற்றும் மருத்துவர்களையும் அதையே செய்ய சொல்லி அவள் அறிவுறுத்தினாள். அதனால், மற்றவர்களும் அவரவர் இல்லம் சென்றார்கள். ஆனால், மகேந்திரனுக்கு தூங்க தோன்றவில்லை. மதுசூதனனும், மதிவதனியும், மமதியுடன் மருத்துவமனையிலேயே தங்கினார்கள்.

யாழினியனின் கைபேசி அழைப்புக்காக காத்திருந்தாள் மதிவதனி. யாழினியன் உண்மையில் எங்கு சென்றிருக்கிறான் என்ற உண்மை தெரிந்தவள் அவள் மட்டும் தான். அவளது எதிர்பார்ப்பை பொய்யாகவில்லை யாழினியன். அவள் எதிர்பார்த்தபடியே, அவளுக்கு அவன் ஃபோன் செய்தான்.

"அக்கா, மமதி எப்படி இருக்கா? அவ ஆபரேஷனுக்கு ரெடியா?" என்றான்.

"அவ ரெடி... ஃபிசிக்கலாவும் மெண்டலாவும்"

"குட்"

"நீ வெங்கட்ராகவன் அங்குளை மீட் பண்ணியா?"

"ஆமாம் கா. நான் அவரை மீட் பண்ணிட்டேன். நாங்க இந்தியா வரோம்"

"அவர் வர ஒத்துக்கிட்டாரா?" என்றாள் குதூகலமாக.

"ஆமாம் கா. அவர்தான் எங்க டிக்கெட்டை எல்லாம் ஏற்பாடு பண்ணது"

"அப்படின்னா சினேகா நம்ம ஆரத்தி தானா?"

"ஆமாம் கா. அதை நான் நாளைக்கு ஆதாரத்தோடு நிரூபிப்பேன்"

"நான் உங்களுக்காக காத்திருப்பேன்" என்றாள் சந்தோஷமாக.

"ஆனா, இதைப் பத்தி யார்கிட்டயும் எதுவும் சொல்லாதீங்க... முக்கியமா ஆர்த்திக்கு எதுவும் தெரிய கூடாது"

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Onde histórias criam vida. Descubra agora