8 எச்சரிக்கை
சினேகாவின் அறையை நோக்கிச் சென்றான் யாழினியன். அவன் செல்வதை பார்த்து அவன் எங்கு போகிறான் என்பதை புரிந்து கொண்ட மகேந்திரன், அவனைப் பார்க்காததைப் போல, முகத்தை திருப்பிக் கொண்டான். விருந்தினர் அறையின் கதவை தட்டினான் யாழினியன். கோபத்துடன் நின்றிருந்த யாழினியனை பார்த்த சினேகா, பதட்டமடைந்தாள். அவளது அனுமதியின்றி அறைக்குள் நுழைந்தான் யாழினியன்.
"நீங்க இங்க என்ன செய்றீங்க?"
இங்கும் அங்கும் பார்த்தவாறு பின்னால் நகருந்தாள் சினேகா."என்னை பாரு..."
அவனைப் பார்க்கவில்லை சினேகா. அவளது மேற்கரங்களை பற்றி, சுவற்றில் சாய்த்தான்.
"உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, நீ ஆர்த்தி இல்லன்னு?"
"நான் ஆரத்தி இல்ல" அவன் பிடியிலிருந்து வெளிவர முயன்றாள் சினேகா.
"பொய்... நீ பொய் சொல்ற. அதனால தான், நீ என் முகத்தை பார்க்க மாட்டேங்கிற"
சில நொடி கண்களை மூடி நின்ற சினேகா, திடமாய் கண் திறந்தாள். அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்து,
"நான் ஆர்த்தி இல்ல. புரிஞ்சுதா?" என்றாள்.
அவளை பற்றியிருந்த பிடியை தளர்த்தினான் யாழினியன்.
"உன்னை காலம் ரொம்பவே மாத்திடுச்சு ஆர்த்தி. நீ நல்லாவே பொய் சொல்ல கத்துக்கிட்டிருக்க"
"தயவுசெஞ்சி இங்கிருந்து போறீங்களா?"
"என்னையா? நீ என்னையா இங்கிருந்து போக சொல்ற?"
"யாருங்க நீங்க? எதுக்காக இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க? நீங்க நம்பினாலும், நம்பலனாலும், நான் ஆரத்தி இல்ல." கத்தினாள் சினேகா.
அதற்காகவே வெளியில் காத்திருந்த மகேந்திரன் உள்ளே ஓடி வந்தான். யாழினியனை பார்த்து முறைத்தான் மகேந்திரன்.
"ஏன் இப்படியெல்லாம் செய்ற, யாழ்?" என்றான் அலுப்புடன்.
"இங்க பாருங்க மிஸ்டர், நான் இந்த வீட்டை விட்டு போறேன். நான் இங்க இருக்க விரும்பல. நான் ஹோட்டல்ல தங்கிக்கிறேன்" என்றாள் சினேகா கண்டிப்பாக.
YOU ARE READING
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
Romanceமூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அ...