1 மருத்துவர்கள்

5.7K 95 29
                                    

1 மருத்துவர்கள்

விஸ்தாரமான சென்னை மாநகரில், விசாலமாய் இருக்கிறது அந்த வீடு. அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையைப் பார்க்கும் பொழுது, அது, வீடா அல்லது மருத்துவமனையா என்ற சந்தேகம் நமக்குள் எழுகிறது. அந்த வீட்டில் ஐந்து மருத்துவர்கள் வசிப்பதாய் அந்த பெயர்ப் பலகைக் குறிப்பிடுகிறது. ஒரே வீட்டில் ஐந்து மருத்துவர்களா?

அந்த வீட்டில், உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறிய பெண்ணின் உடல், நீல நிறமாக மாறியிருந்ததைப் பார்த்த
அவளது தாய் மதிவதனி, அவள் உடலை தொட்டுப் பார்த்து, அது சில்லிட்டு போனதை அறிந்து அலறினாள்.

"மமதி..." என்று பதற்றத்துடன் அந்த குழந்தையை எழுப்ப முயன்றார் அந்த பெண்.

அந்த வீட்டில் இருந்த அனைவரும் அங்குக் கூடினார்கள். அவர்களின் முக பாவங்களை பார்க்கும் பொழுது, அவர்கள் அனைவரும் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும்.

திருமணம் ஆகி ஆறு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தவள் மதிவதனி. மமதி அவளின் ஒரே செல்ல குழந்தை. இப்பொழுது மமதியின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறது.

துரதிஷ்டவசமாக, மமதி பிறக்கும் பொழுதே இதயத்தில் ஓட்டையுடன் பிறந்தாள். அவள் வளர வளர அது தானாகவே மூடிக்கொள்ளும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். ஒருவேளை அப்படி நிகழாவிட்டால், இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே வழி என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது.

இத்தனை மருத்துவர்களைக் கொண்ட அந்த குடும்பம் எதற்காக இவ்வளவு கவலை கொள்கிறது என்று கேள்வி எழலாம். மமதி ஒரு சர்க்கரை நோயாளி. சர்க்கரை நோயாளியான, ஏழு வயதே ஆன சிறிய பெண்ணுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினமான காரியம் அல்லவா?

"சீக்கிரமா ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போகலாம்" என்ற மதிவதனியின் கணவன் மதுசூதனன், மமதியை தன் தோளில் தூக்கிக்கொண்டு நடந்தான்.

அவனுடன் நடந்தபடி, தனது தம்பியான யாழினியனுக்கு ஃபோன் செய்தாள் மதிவதனி.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Donde viven las historias. Descúbrelo ahora