34 ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு..

1K 73 12
                                    

33 ஏழு ஆண்டுகளுக்கு பிறகு...!

வெற்றிப் புன்னகையுடன் அந்த அழைப்பை துண்டித்தாள் சினேகா. ஆரத்தியோ திருப்தி புன்னகை பூத்தாள். அவள் கணித்து விட்ட விஷயம் சரிதானா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால், நிச்சயம் யாழினியின் அவளை கண்டுபிடித்து விடுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு எழுந்தது. யாழினியன் மீது வைத்திருந்த நம்பிக்கையை அவள் எப்போதுமே கைவிட்டதில்லை. அதனால் தான், சாப்பிட்டு, உறங்கி தன்னைத்தானே தேற்றிக்கொண்டு வந்தாள்.

ஆர்த்தி கருவுற்றிருக்கிறாள் என்ற உண்மை சினேகாவுக்கு தெரிய வந்த போது, கருவை கலைத்து விடும் படி தான் கூறினாள் சினேகா. ஆனால் அதற்கு ஆர்த்தி ஒப்புக் கொள்ளவில்லை. ஆர்த்தியின் தாய்மை பற்று தான் நமக்குத் தெரியுமே...! ஆனால் சினேகாவால் அதை புரிந்து கொள்ள முடியாது தானே? திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு, குழந்தை பெறும் தைரியம் எப்படி வந்தது என்று அவளுக்கு புரியவில்லை... அதுவும் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது...! ஆர்த்திக்கு குழந்தை மேல் இருந்த ஆர்வத்தை பார்த்த பிறகு, சினேகாவின் மனம் வேறு கோணத்தில் திட்டமிட்டது. அவளுக்கு பிடித்ததை எல்லாம் பறிப்பது தானே சினேகாவின் எண்ணம்? அதனால் அவளது குழந்தையையும் அவளிடம் இருந்து பறிக்க துணிந்தாள்.

ஆர்த்தியின் சான்றிதழில் இருந்த அவளது பெயரை, சட்டப்படி சினேகா என்று மாற்றினாள். அது தான், அவள் உண்மையிலேயே யாழினியன் மீது மிகவும் கோபமாக இருக்கிறாள் என்று வெங்கட்ராகவனையும் நம்ப வைத்தது. ஆனால் அவள் வெங்கட்ராகவனிடம், 'யாழினியன் அவளை கண்டுபிடித்து விடக்கூடாது' என்பதால் அவள் பெயரை மாற்றியதாய் கூறினாள். அவள் எண்ணியது போலவே, மன்னிக்க முடியாத பெரிய குற்றத்தை யாழினியன் செய்து விட்டதால் தான் ஆரத்தி அவனை மன்னிக்க விரும்பவில்லை என்று வெங்கட்ராகவனும் நம்பினார்.

ஆர்த்திக்கு குழந்தை பிறந்து, ஓராண்டு கழித்து, சினேகாவும் தனது கார்டியாலஜி படிப்பை முடித்தாள். அவளுக்கு லண்டனில் இருக்கும் ஹோலி கிறிஸ்ட் மருத்துவமனையில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவளுடைய திட்டத்தை செயல்படுத்த கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை கைநழுவி விட அவள் தயாராக இல்லை. லண்டனுக்கு வந்து விடும்படி வெங்கட்ரகவனை அழைத்தாள். காயப்பட்ட தன் மனதிற்கு ஆறுதல் அளிக்க, ஒரு குழந்தையை தத்தெடுக்க போவதாகவும் அவரிடம் கூறி அவரை நம்ப வைத்தாள்.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Où les histoires vivent. Découvrez maintenant