51 சினேகாவின் தோட்டா...
யாழினியன், மகேந்திரன், கதிரவன், நிலவன் நால்வரும் மூளைக்கு மூளை சினேகாவை தேடிக் கொண்டிருந்தார்கள். அவளை எங்கும் காணாததால் ஏமாற்றம் அடைந்தார்கள். வானதியின் அறைக்குச் சென்றான் யாழினியன்."வானதி, உனக்கு நிச்சயமா தெரியுமா, நீ பார்த்தது சினேகாவை தானா?" என்றான் மீண்டும் அதை நிச்சயப்படுத்திக் கொள்ளும் வண்ணம்.
"நிச்சயமா தெரியும். அவ சினேகாவே தான்." என்றாள் வானதி உறுதியுடன்.
"ஆனா, அவ எங்கேயும் இல்லையே..." என்றான் யோசனையுடன்.
"யாழ், இந்த நேரம் விருந்தாளுங்க எல்லாம் வர ஆரம்பிச்சிருப்பாங்க... நம்ம இன்னும் யோசிச்சுக்கிட்டே இருக்க முடியாது இல்லையா?" என்றாள் ஆர்த்தி.
"ஆமாம், ஆல்மோஸ்ட் எல்லாரும் வந்துட்டாங்க" என்றான் யாழினியன்
"அப்படின்னா, நம்ம பார்ட்டியை ஆரம்பிச்சாகணும். எவ்வளவு நேரம் நம்ம அவங்களை காக்க வைக்க முடியும்?" என்றாள் ஆர்த்தி.
"எனக்கு என்னமோ அது சேஃபா இருக்கும்னு தோணல"
"வீட்டை சுத்தி தான் போலீஸ் இருக்காங்களே... அவங்க கவனிச்சுக்குவாங்க" என்றான் மகேந்திரன்.
"சரி. அவங்கவங்க குழந்தைங்களை, அவங்கவங்க ஜாக்கிரதையா பாத்துக்கணும். பி கேர்ஃபுல்" என்றான் யாழினியின்.
"ஆமாம், எல்லாரும் அவங்க கையைப் பிடிச்சுக்கோங்க. எங்கேயும் போக விடாதிங்க. ஜாக்கிரதை" என்றான் மகேந்திரன்.
தத்தம் அப்பாக்களின் கைகளை பற்றிக்கொண்டு, பிள்ளைகள் ஒன்றன்பின் ஒருவராய் அணிவகுத்து வந்தார்கள். வந்திருந்தவர்கள், அந்த அணிவகுப்பை பார்த்து, அது திட்டமிட்டு செய்யப்பட்டது என்று நினைத்தார்கள் அது பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது.
சரியாய் அதே நேரம், வெங்கட்ராகவனுடன் உள்ளே நுழைந்தார் புனிதா. அங்கு போலீஸ்சாரை பார்த்த வெங்கட்ராகவன், ஏதோ தவறாய் நடந்திருப்பதை உணர்ந்தார். யாழினியனை தனியாய் அழைத்துச் சென்ற அவர்,
ŞİMDİ OKUDUĞUN
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
Romantizmமூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அ...