21 சரி பார்க்கும் படலம்

1K 72 20
                                    

21 சரி பார்க்கும் படலம்...

எண்ணச் சுழலில் மாட்டிக்கொண்டவன் போல, சினேகாவின் வார்த்தைகளுக்கும், எதார்த்தத்திற்கும் இடையில் சிக்கித் தவித்தான்  யாழினியன். அவனைப் பார்த்து கள்ள புன்னகை வீசிக்கொண்டு நின்றாள்  சினேகா.

*இவள் பார்க்க ஆர்த்தியை போல் இருக்கிறாள். ஆனால் அவளுடைய நடவடிக்கைகள் எதுவுமே ஆரத்தி போல் இல்லை. அவளது செயல்கள் ஒவ்வொன்றுமே ஆர்த்திக்கு நேர்மாறாய் இருக்கிறது. எவ்வளவு தான் ஆர்த்தி என் மீது கோபமாக இருந்தாலும், இந்த அளவிற்கு அவள் அடாவடியாக நடந்து கொள்பவள் அல்ல... அதுவும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு என்னை பார்க்கும் அவள், நிச்சயம் இப்படி நடந்து கொள்ள மாட்டாள். அவனை விட்டு அவள் பிரிந்து இருந்தாலும், நிச்சயம் அவனை பற்றி விசாரித்து அறிந்திருப்பாள். அவன் அவளுக்காக தான் காத்திருக்கிறான் என்பது தெரிந்தும், இவ்வளவு இறுக்கமாய் இருக்க மாட்டாள்.* என்று தனக்குள் யோசித்த யாழினியன், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

"நீ சினேகாவா இல்லன்னா, நான் நிச்சயம் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்"

"நான் சினேகா தான்"

ஒன்றும் கூறாமல் அந்த இடம் விட்டு அகன்றான் யாழினியன். சர்வ சாதாரணமாய்  தன் வேலையை தொடர்ந்தாள் சினேகா.

அங்கிருந்து நேராக மகேந்திரனின் அறைக்கு  சென்றான் யாழினியன்.  சினேகாவை பற்றி மைதிலி கூறிய விஷயத்தை யோசித்துக் கொண்டிருந்தான் மகேந்திரன். ஒருவேளை சினேகா, சினேகா தானோ? அப்படி இருந்தால், மீண்டும் யாழினியன் ஏமாற்றம் அடைவான் அல்லவா? அதை நினைத்த போதே, மகேந்திரனுக்கு பதற்றம் ஏற்பட்டது. யாழினியன் வருவதை பார்த்த அவன், நிமிர்ந்து அமர்ந்தான்.

"எனக்கு டாக்டர் ரோஸோட நம்பர் கிடைக்குமா?" என்றான் யாழினியன்.

ஒருவேளை, மைதிலி தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அவர்களிடம் கூறாமல் இருந்திருந்தால், நிச்சயம் மகேந்திரன் அவனுக்கு ரோஸின் கைபேசி எண்ணை கொடுக்க மாட்டேன் என்று மறுத்தலித்திருப்பான். ஆனால் இப்பொழுது அவன் அதை செய்யும் மனோ நிலையில் இல்லை. தருகிறேன் என்பது போல் தலையசைத்து விட்டு தனது கைபேசியை எடுத்து, ரோஸின் எண்ணை யாழினியனுக்கு அனுப்பி விட்டு,

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now