66 சித்திரவேலின் முயற்சி
இனியவனை முத்து வியப்படையச் செய்தான் என்று கூறுவதை விட, திகைப்படைய செய்தான் என்று தான் கூற வேண்டும். இனியவனுக்கு முன் நின்று தன் குரலை உயர்த்த எப்பொழுதும் துணியாத முத்து, அவனது வாழ்வில் ஆழ்வியின் பங்கு எப்படிப்பட்டது என்று கூறத் தயங்கவில்லை. அவன் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாதாரணமானவை அல்ல. அதில் அக்கறை தேங்கி இருந்தது. இனியவனுக்கு தன் முன்னாள் யாரும் குரலை உயர்த்துவது பிடிக்காது என்று தெரிந்தும், அதை செய்ய அவன் தயங்கவில்லை. அதனால் தானே அவனது குடும்பத்தார் கூட தங்கள் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள்! இனியவன், மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது, அவனுக்காக உளமாற முத்து வருத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆழ்வி அவனுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்த பிறகு அவனிடம் ஏற்பட்ட மாற்றம் தான் அவனுக்கு ஆழ்வியிடம் ஒரு பெருமதிப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தனக்கு இப்படி ஒரு விசுவாசமான வேலைக்காரன் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான் இனியவன்.
முத்துமிடமிருந்து இப்படி ஒரு எதிர்வினையை ஆழ்வியே கூட எதிர்பார்க்கவில்லை. இனியவன் குடும்பத்தினரே அதை செய்ய தயங்கிய போது, தன் மனதில் இருப்பவற்றை வார்த்தையில் கொண்டு வந்து முன்னிறுத்த தயங்கவில்லையே முத்து! அவன் நெத்தியடி போல அல்லவா பேசினான்! அவனை நினைத்து பெருமைப்பட்டாள் ஆழ்வி.
இனியவனின் குடும்பத்தாரின் நிலையோ சொல்லில் அடங்கவில்லை. முத்துவால் இவ்வளவு பேச முடியும் என்று அவர்கள் அன்று தான் அறிந்து கொண்டார்கள். அவர்கள் எதையோ தவற விடுகிறார்களா? முத்து கூறியது அவர்களுக்கு சாதாரணமாய் படவில்லை. அவன் தன் உள்ளத்தில் இருந்து அதை கூறியதாகவே அவர்கள் உணர்ந்தார்கள். இனியவனுக்காக ஆழ்வி செய்த ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு மகிழ்வை தந்திருக்க வேண்டும். யாராலும் செய்ய முடியாததை ஆழ்வி செய்தாள் என்பதை ஒப்புக்கொண்டு தானே தீர வேண்டும்? எதையோ தீவிரமாய் சிந்தித்தபடி இனியவன் நின்று இருப்பதை கண்டார்கள் அவர்கள். அவனது முகத்தில் தோன்றிய பாவனையை இதற்கு முன் அவர்கள் கண்டதில்லை.

ВЫ ЧИТАЕТЕ
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)
Любовные романыஇளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத...