அன்பே!

86 10 2
                                        

வரண்டுப் போன
என் தேசத்தில்
வான் மழை நீ

பட்டு போன
என் இதயத்தில்
துளிர்த்த
பசுந்தழை நீ

திக்கு தெரியாத
என் பயணத்தின்
கலங்கரைவிளக்கம் நீ

ஒளி இல்லாத
என் இரவின்
மின்மினி நீ

பசியுற்ற
என் பகலின்
முதல் கவளம் நீ

நிறமில்லா
என் ஓவியத்தின்
வர்ணம் நீ

வாய் மொழியாத
என் காதலின்
தவிப்பு நீ

கவிதைகள் தமிழில்Where stories live. Discover now