இருளமர்ந்த நள்ளிரவில்
என்னுள்
மின்மினியாய்
உன் நினைவுகள் !
எழிலுருவம் கொண்டு
துயில் கலைக்கிறாய் !
சித்திரை மாத
சிறு மழையாய்
உள்ளம் நனைக்கிறாய்!
மனம் நனைத்து
உன் வாசனையை
விட்டு செல்கிறாய் !
என் மனதில் எதிரொலிக்கும்
உன் சிரிப்பு சத்தம்
எனக்கு
தந்து செல்கிறாய்
காதல் பித்தம் !
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
