அம்மா

110 10 2
                                    


விலகி போன பின்பே
விலைமதிப்பில்லாத்து
என்று புரிகிறது
அம்மாவின் அன்பு

சிறு வயதில்
சிடுசிடுத்த பொழுது
சீர்தூக்கி பார்க்கத்தெரியவில்லை !

வாழ்க்கை புரியத்தொடங்கும்
போதோ
வார்த்தைகள் என்னிடமில்லை !

உன்னைப் பற்றி
உன்னை தவிர
அனைவரிடமும் வாழ்த்துரைக்கிறேன்
உன் முகம் நோக்கி
உரைத்திட
வெட்கி தலைகுனிகிறேன் !

அன்று
என் கண்ணீரைக் காட்டி
காரியம் சாதித்த நான்
இன்று
உதட்டின் வளைவில்
உள்ளத்தை மறைக்கிறேன் !

சிறு பிள்ளையாகவே
இருந்திருக்கலாம் !

என்றும் இன்பமாய்
மகிழ்ந்திருக்க அல்ல !!

இன்றும் துன்பமென்றால்
உன் மடியில்
விழுந்து அழ !!!

கவிதைகள் தமிழில்Donde viven las historias. Descúbrelo ahora