அத்தியாயம் 8

3.3K 131 23
                                    

சஞ்சனா அந்த அறைக்குள் போன வேகத்திலேயே ஓடிவந்து "என்னங்க... என்னங்க" என்று ஆஷ்வினை கூப்பிட்டாள்

ஆனால் அவன் இவள் பேச்சை கண்டுகொள்ளாமல் அமர்ந்து இருந்தான்

சஞ்சனா"என்னங்க ... என்னங்க... என்னங்க...."என்று விடாமல் அவனை அழைத்தாள்

அஷ்வின்"இம்ச இம்ச என்னடி..." என்றான் கோவமாக

சஞ்சனா"நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி என் கிட்ட கோவபடுறீங்க " என்றாள் கண்களில் கண்ணீர் வடிய

அஷ்வின்"சும்மா அழுது சீன் கிரியேட் பண்ணாம எதுக்கு என்ன கூப்பிட்டனு தொல்லித்தொலை " என்றான் கடுப்பாக

சஞ்சனா தன் விழிகளை துடைத்துக் கொண்டு" இல்லங்க அது வந்து......... அந்த ரூம்ல வைன் போத்தல் ரெண்டு இருந்திச்சு" என்றாள் தயங்கியபடி

அஷ்வின்"அதுக்கு என்ன இப்போ"என்றான்

சஞ்சனா" நீங்க.... நீங்க தண்ணி அடிப்பீங்களா" என்றாள் அதே தயக்கம் கலந்த பேச்சுடன்

அஷ்வின்"ஆமா" என்றான் திமிராக

சஞ்சனா"என்ன சொல்றீங்க தண்ணி அடிக்கிறது ரொம்ப தப்புங்க...தயவு செஞ்சு எனக்காக இனிமே குடிக்காதீங்க" என்க

அஷ்வின்" ஹேய் யாருடி நீ....ஒஹ் என்மேல உரிமை எடுத்து பேசுற அளவுக்கு வந்துட்டியா நீ " என்க

சஞ்சனா" என்னங்க பேசுறீங்க... நீங்க என்னோட புருஷன் .. உங்க மேல உரிமை எடுத்துக்காம நான் வேற யாரு மேல உரிமை எடுத்துக்க முடியும்" என்றாள்

அஷ்வின்" ஹ்ம் புருஷன்... என்று விரக்தியாக சிரித்துவிட்டு ..... இங்க பாரு அப்பா சொன்னதுக்காக உன் கழுத்துல தாலிய கட்டுனேன்ங்குறதுக்காக உன் கூட சேர்ந்து வாழ்ந்துடுவேன்னு மட்டும் நெனச்சிடாதே " என்றான்

சஞ்சனா".........."

அஷ்வின்"என்ன அமைதியா இருக்க ... நான் சொன்னது காதுல விழுந்துச்சா இல்லயா" என்றான் அவள் முன் சொடக்கு போட்டு

சஞ்சனா கண்களில் கண்ணீர் வடிய தலையை அசைத்தாள்

அஷ்வின்"இங்க பாரு உனக்கு எப்போ வேணும்னாலும் உங்க அம்மா வீட்டுக்கு போய்டலாம் நான் எதுவும் சொல்ல மாட்டேன்"என்க

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now