அத்தியாயம் 41

2K 80 37
                                    

"பார்வதி மாப்பிள்ளை வரேன்னு சொன்னாரா?" என்க

"ஆமாங்க அனேகமாக இப்போ கிளம்பி இங்க வந்திட்டு இருப்பாரு" என்றாள்

கடிகாரம் வேகமாக சுழல நேரமும் தன் பாட்டில் சென்றுக்கொண்டே இருந்தது

" சித்து கொஞ்சம் தள்ளி உட்காரு" என்று அவனருகே அமர்ந்து கொண்டாள் சஞ்சனா... வாசல் படியில்

இந் நேரம் அஷ்வினின் கார் இவர்களின் கேட் முன்னே நிற்க

"மாமா வந்திருக்காரு நேத்து தானே கிளம்பி போனாரு" என்றான் சித்தார்த்

" சரி வா போய் விசாரிப்போம்" என்று இருவரும் அவனது காரை நோக்கி நடையை கட்ட

அஷ்வின் கார் கண்ணாடியை இறக்கி இவர்களை பார்த்தவன் " ஆஹா இவ வேற வராளே...சரிய் கண்டுகாத மாதிரியே இருப்போம் " என்று முகத்தை திருப்பிக் கொள்ள

இவனருகே வந்தவள் " ஹலோ உங்கள தான் ஹலோ " என்றாள்

" எஸ் " என்று இவர்கள் புறம் முகத்தை திருப்ப

" இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க " என்றாள்

"புரியல" என்க

"இல்ல இந்த இடத்துல நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீங்கனு கேட்டேன்" என்றாள்

"ஏன் இந்த இடத்துல நிற்க கூடாதா.. நான் ரோட்டுல தானே நிற்கிறேன் ...ரோட்டுல நிற்க கூடாதுன்னு எந்த சட்டமும் இல்லையே" என்றான் அஷ்வின்

"ரோட்டுல நிற்கிறது சரி அதுக்கு ஏன் எங்க வீட்டு வாசல் முன்னாடி நிற்கிறீங்க?" என்றாள்

"ஆங் அது நான் இந்த பக்கமா வந்தேன் ரிட்டர்ன் வரும் போது வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் வந்துட்டீங்க " என்றான்

" என்ன பார்க்கனும்னா உள்ள வந்து பார்க்க வேண்டிடது தானே பேச வேண்டியது தானே அத விட்டுட்டு ஏன் இந்த மாதிரி பொய் சொல்லிட்டு வெளியவே நிற்குறீங்க " என்றாள்

" என்ன நான் உன்ன பார்க்க அதுவும் இங்க " என்று கூறிவிட்டு பலமாக சிரிக்க அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள்
சித்தார்த் அருகில் இருப்பதால் எதுவும் சொல்ல இயலவில்லை அவளுக்கு

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Dove le storie prendono vita. Scoprilo ora