அத்தியாயம் 10

3.2K 107 29
                                    

அஷ்வின் வெகு நேரமாக ரூமிற்குள் அடைந்து இருப்பதால் சோம்பலுடன் கொட்டாய் விட்டபடி ஹாலின் வந்து அமர்ந்தான்
சஞ்சனா இவன் அமர்ந்து இருப்பதை கண்டு ஓடிச் சென்று சுட சுட காபி போட்டு கொண்டு வந்து இவன் முன் நீட்டினாள்

சஞ்சனா"என்னங்க காபி...."

அஷ்வின்"எனக்கு வேணாம்"என்று முகத்தை திருப்பிக் கொண்டான்

சஞ்சனா" ப்ச் என்னங்க நீங்க குழந்த மாதிரி அடம் பிடிக்கிறீங்க ... மொதல்ல இந்த காபிய குடிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க " என்று விடாப்பிடியாக அவனது கையை இழுத்து காபி கப்பை கொடுத்தாள்

அஷ்வின்க்கு பசி வயிற்றை கிள்ள மறுப்பேதும் தெரிவிக்காமல் காபியை மடக் மடக் என்று எல்லாதயும் குடித்து முடித்தான்

"நல்லா இருக்கா "என்று ஆர்வமாக சஞ்சனா கேக்க காபியா இது நல்லாவே இல்ல இத விட நான் சூப்பரா போடுவேன் என்று சமாளிக்க சஞ்சனா இவனது முகத்தை பார்த்து சிரித்தாள்

அஷ்வின்"எதுக்கு டி சிரிக்கிற " என்றான் கோவமாக

சஞ்சனா"நல்லா இல்லாமலா மிச்சம் மீதி வைக்காம குடிச்சி முடிச்சீங்க " என்றாள் சிரிப்புடன் அஷ்வின் இதற்கு என்ன பதில் சொல்வது என்று முழித்தான்

சஞ்சனா" ஏங்க எங்கயாவது வெளிய போலாமா" என்று கேட்க காலில் பெல் அடித்து

அஷ்வின் போய் கதவை திறக்க அங்கே விகாஷ் நின்று கொண்டு இருந்தான்

அஷ்வின்"டேய் வாடா மச்சான்" என்று அழைக்க

விகாஷ்" மச்சி கதவ மூடிட்டு என்னடா பண்ண" என்று கண்னை சிமிட்ட
யெப்பா சாமி வந்த உடனே ஆரம்பிக்காதே உள்ள வா என்று அவனது முதுகை தட்டி அழைத்துச் சென்றான் அஷ்வின்

சஞ்சனா" உட்காருங்க அண்ணா... நான் காபி கொண்டு வரேன் என்று kitchenக்குள் நுழைந்தாள்"..

விகாஷ் மற்றும் அஷ்வின் பிராஜெக்ட் விஷயமாக பேசிக்கொண்டு இருந்தனர்
சஞ்சனா வந்து விகாஷ்க்கு மாத்திரம் காபியை நீட்டினாள்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now