அத்தியாயம் 13

2.8K 104 34
                                    

அஷ்வின் குளித்து முடித்து விட்டு ஆஃபிஸ் கெளம்புறதுக்கு பரபரப்பாக ரெடியாகி முடிந்ததும் ரூமை விட்டு வெளியே வர

சஞ்சனா காலை உணவை தயார் செய்து மேசையின் மீது எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்

சஞ்சனா"ஏங்க சாப்பாடு ரெடி...வந்து சாப்பிடுங்க"என்க

"எனக்கு வேணாம் " என்றான் வீராப்பாக

சஞ்சனா"இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல"என்று முணுமுணுக்க

அஷ்வின்"என்னடி சொன்ன" என்றான் கடுப்பாக

சஞ்சனா" ஆ.... இந்த வெட்டி கோபத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்லனு சொன்னேன்.." என்க
அஷ்வின் பதிலுக்கு அவளை முறைத்தான்

சஞ்சனா"ஓகே ஓகே சாப்பாடு விஷயத்துல சண்ட வேணாம்.. நான் நல்லா தான் சமச்சி வச்சு இருக்கேன் வந்து சாப்பிடு"என்க

"ச்சா இன்னிக்கி நம்மல சாப்பிடாம விடமாட்டாள் போல இருக்கே..சாப்பாடு தானே சாப்பிட்டுட்டு கெளம்புவோம்"என்று மனதில் எண்ணியவாறு சாப்பிடுவதற்கு அமர்ந்து கொண்டான்

சஞ்சனா சிரித்துக் கொண்டே அவனுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தாள்

அவனும் சாப்பிட சஞ்சனா அவன் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்

அஷ்வின்" என்ன பார்க்குற? நீ சாப்பிடல" என்க

சஞ்சனா"இல்ல மொதல்ல நீங்க சாப்பிடுங்க நான் அப்புறமா சாப்பிட்டுகிறேன் "என்றாள்

அஷ்வின்" ஹ்ம் ஒகே" என்க

சஞ்சனா" ஏங்க சாப்பாடு நல்லா இருக்கா" என்றாள்

அஷ்வின்"நல்லா இல்ல..ஏதோ பசிக்கிறதுக்காக சாப்பிட்றேன் " என்றான்

சஞ்சனா அவன் சாப்பிடும் பிளேட்டை எடுத்து கொஞ்சம் தள்ளி வைத்தாள்

அஷ்வின்"ஏய் என்னடி பண்ற.. அதான் நான் சாப்பிட்டுட்டு இருக்கேன்ல" என்றான் கோவமாக

சஞ்சனா" நல்லா இல்லாத சாப்பாட்ட எதுக்கு சாப்பிடனும்..நீ கேன்டீன்ல சாப்பிடுங்க" என்றாள்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now