அத்தியாயம் 49

2.5K 73 27
                                    

" ஆரம்பத்துல உன் மீது வெறுப்பும் கோபமும் இருந்தது அதை இல்லை என்று சொல்ல மாட்டேன்... ஆனால் அந்த வெறுப்பிற்கு பின்னே ஒரு விதமான அன்பு நிச்சயம் இருந்திருக்க வேண்டும்

இல்லையென்றால் என்னால் இந்தளவிற்கு உன் மீது அன்பு செலுத்த முடியாதிருக்கும் " என்றான் அஷ்வின் தன் இமைகளை வெட்டாமல்

" ஒரு விதமான அன்பு இருந்ததுன்னு சொன்னீங்களே அந்த அன்பையும் கோபமாக வெளிப்படுத்துறது தான் உங்க ஸ்டைல் இல்ல " என்றாள் குத்தலாக

" உன்னிடம் நல்ல மனிதராக பழக முயன்றால், அது தொடர்ந்து... சுலபத்தில் உன்னிடம் மயங்கி விடுவேனோ என்ற பயம் எனக்குள் இருந்திருக்க வேண்டும்

என்னை என்னிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டும்மென்ற எண்ணத்தில் தான் , சற்றும் இரக்கமின்றி நடந்திருக்கிறேன்
நினைத்தால் ரொம்பவே அவமானமாக இருக்கிறது
மன்னிப்பு என்ற வார்த்தை அதற்கெல்லாம் ஈடாகி விடாது தான்... இருந்தாலும் நான் அப்படி நடந்து கொண்டதற்காக உன்னிடம் முழு மனதோடு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் சனா , ரியலி ஐ'ம் ஸ்சாரி மா " என்றான் வருத்தமான முகத்துடன்

" ஷ் என்ன அஷ்ஷு இது? " என்று அவன் உதட்டில் கை வைத்து தடுத்தாள் சஞ்சனா

" செய்தது தவறு , தப்பென்று தெரிந்தால், வயது வித்தியாசம் கூடப் பாராது , மன்னிப்பு கேட்டுவிட வேண்டுமென்று கேள்விய பட்டிருக்கேன் ... அதான் அந்த பேச்சை அப்படியே கடைபிடிச்சிட்டேன் " என்றான்

உதட்டோரம் தவழ்ந்து வந்த புன் முறுவலுடன் , முன் எப்போதும் இல்லாத ஒரு இயல்பு தன்மையை உணர்ந்தாள் சஞ்சனா

ஆனாலும் உள்ளூர ஏதோ ஒரு ஏக்கம், பேயலையாக தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை அவளால்

" இத்தனை நாளா மேடம் என் கிட்ட சண்ட போடாமல் ரொம்ப தவிச்சிட்டீங்களோ ?" என கண் சிமிட்டலுடன் கேட்டான் அஷ்வின்

"எவ்வளவு உறுதியாக சொல்கிறான் " என்று விழிகளை விரித்தாள் அவள்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now