அத்தியாயம் 45

2K 73 26
                                    

காலை உணவை முடித்தவுடன் ராமசாமி மீண்டும் ஊருக்கு செல்ல முற்படும் போது செல்ல

" எதுக்கு உடனே கிளம்புறீங்க...நேத்து தானே வந்தீங்க இருந்துட்டு போங்க பா' என்றான் கெஞ்சலாக அஷ்வின்

"ஆமா அங்கிள் எதுக்கு இப்படி திடுதிப்புனு... இருந்துட்டு போலாமே " என்றாள் சஞ்சனா

"இல்ல பா எனக்கும் ஆச தான் ஆனா ... முக்கியமாக வேல ஒன்னு இருக்கு அதான் இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்" என்று விடாப்பிடியாக கூற

அஷ்வின் " சொன்னா கேட்க மாட்டீங்க.... சரிய் வாங்க" என்று தன் காரை ஸ்டார்ட் செய்ய ராமசாமியும் விடைபெற்றுக் கொண்டு காரில் அமர வண்டியும் கிளம்பியது

அஷ்வினின் கார் வலது புறமாக கேட்டில் இருந்து வெளியேற இடது புறமாக இன்னொரு வண்டி கேட்டின் அருகே வந்து நின்றது

அதில் இருந்து இறங்கிய ஒருவர் " வித்யா மேடம் " என்று பேச

வெளியே வந்த வித்யா " சொல்லுங்க
அங்கிள் " என்க

சஞ்சனா எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்

" மேடம் சார் உங்கள கூட்டிட்டு வரச் சொல்லி வண்டிய அனுப்புயிருக்காரு " என்றார் வந்தவர்

"வித்யா யாரு இவரு " என்றாள் சஞ்சனா

" அண்ணி இவரு தான் எங்க அப்பாவோட டிரைவர் மணி அங்கிள் " என்றாள் வித்யா அவரை அறிமுகப்படுத்தி
அவளும் தலையை அசைத்தாள் புரிந்தது போலும்

" மேடம் சார் உங்கள கூட்டிட்டு வரச் சொன்னாரு " என்றார் மீண்டும்

" எதுக்கு திடீர்னு...இவளோ நாலு இங்க தானே இருந்தேன் " என்றாள் கோபமாக

" சார் தான் உங்கள கூட்டிட்டு வரச் சொன்னாரு மா... நான் வெயிட் பண்றேன் நீங்க ரெடியாகிட்டு வாங்க " என்றார் தாழ்மையாக

" முடியாது அங்கிள் உங்க சார் கிட்ட போய் சொல்லு வர முடியாதுன்னு சொன்னதா போங்க அங்கிள்...இங்கிருந்து டைம் வேஸ்ட் பண்ணாதீங்க " என்றாள் வித்யா

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Wo Geschichten leben. Entdecke jetzt