வித்யா "அப்பா.... எங்க இருக்கீங்க " என கூவியபடி வீட்டுப் படியில் கால் வைக்க பிரதாப் வெளியே வந்தார்
" நேத்து தானே கிளம்பின இன்னிக்கே வந்திருக்க ஏதாவது ப்ராப்ளமா ?" என்றார் கடும் குரலில்
அவளோ மெளனத்தை பதிலாக அளித்தாள்
" வித்யா உன்ன நம்பி தான் ஒப்படைத்தேன்.... பத்து கோடி ரூபா பிராஜெக்ட்... நேத்து கிளம்பும் போது ஸ்டார்ட் பண்ணவே ஒரு வாரம் ஆகும்னு சொன்ன ஆனா மறுநாளே வந்து நிக்குற" என்றான் அதீத சத்தத்துடன்
வித்யா" ஆமா பா தொடங்குறதுக்கு தானே ஒரு வாரம் ஆகும்னு சொன்னேன் முடிக்கிறதுக்கு இல்லையே" என்றாள்
" எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு வித்யா பத்து கோடி நம்ம கைய விட்டு போயிட கூடாது" என்றார் கோபமாக
"அது வந்து பா நான் அந்த பிராஜெக்ட்ட க்ளோஸ் பண்ணிட்டேன்" என்று
கூறி முடிக்க முன் பிரதாப்பின் கை விரல்கள் ஐந்தும் வித்யா கன்னத்தில் பதிந்ததுகலங்கிய கண்களுடன் தன் கண்ணத்தை தாங்கியவாறு பிரதாப்பை பார்க்க அவரோ மிருகமாக உருவெடுத்திருந்தார்
"அப்பா ....." என்க
"இனிமே என்ன அப்பான்னு கூப்படாதே.... பத்து கோடி மொத்தமா போச்சு போச்சு" என்றார்
" எதுக்கு பா பணம் பணம்னு அலையுறீங்க .... உங்களுக்கு அந்த பத்து கோடி முக்கியம்னா எனக்கு விலைமதிப்பற்ற அந்த கிராமத்தில் வாழும் மக்களோட உயிரு முக்கியம்" என்றாள் கண்கள் கலங்க
பிரதாப்" முட்டாள் முட்டாள் பிராஜெக்டயே க்ளோஸ் பண்ணிட்டு வந்திருக்கியே இதனால எனக்கு எவளோ லாஸ் தெரியுமா...செத்து தொலையட்டும்னு விட்டிருக்க வேண்டியது தானே.... அவங்க உயிரோட இருந்தாலும் இல்லைனாலும் யாருக்கு லாபம் " என்றார் கடும் குரலில்
" உங்களுக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா... எப்படி பா ஒரு உயிரோட மதிப்ப சாதாரணமாக எடை போடுறீங்க" என்றாள் கோபமாக
YOU ARE READING
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை