அத்தியாயம் 30

2.3K 81 29
                                    

சஞ்சனா மாத்திரையை விழுங்கிய படி "தண்ணி தண்ணி... வேணும் " என்று சைகை செய்ய உடனே தண்ணீரை எடுத்து அவள் வாயில் ஊற்றி விட்டான்

அஷ்வின்" ஸாரி சஞ்சனா " என கலங்கிய குரலில் கூற

"ஆஆஆஆஆஆவ் அம்மா " என காலை உதறினாள்

" என்னாச்சு..." என பார்க்க

" நீ என் கால மிதிச்சிட்டு இருக்க ... மொதல்ல கால எடு " என்றாள் வலி புரண்ட கோபத்துடன்

அஷ்வின்" அய்யோ தெரியாம பண்ணித் தொலைச்சிட்டேனே... இப்போ எப்படி சமாளிக்கிறது " என யோசித்து விட்டு

"ஸாரி சஞ்சனா தேவி பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடு " என்றான் தன் இரு காதுகளையும் பிடித்துக் கொண்டு

" மொதல்ல நகரு " என செல்ல... அஷ்வின் அவளது கையை பிடித்து தன் பக்கத்தில் இழுத்தான்

"ஸாரி சரியா " என மீண்டும் மெல்லிய குரலில் கேட்க

சஞ்சனா மெளனமாக இருந்தாள்

"ஸாரி ஸாரி ஸாரி " என்க

"சரிய் இனிமே இப்படி பண்ணாதே" என கூறிவிட்டு செல்ல

"அவ்ளோ தானா " என்றான் தன் ஒற்றை விரலை நெற்றியில் தேய்த்தபடி

"ஆமா அவ்ளோ தான்" என்றாள் உள்ளுக்குள் சிரிப்புடன்

மீரா " விகாஷ் .......அக்கா ஏன் மாமா கிட்ட கோபமா பேசினாங்க..." என்க

விகாஷ்" அது ஒரு பெரிய கதை சுருக்கமா சொல்லணும்னா அஷ்வின் பிடிக்காம தான் சஞ்சனாவ கல்யாணம் பண்ணிக்கிட்டான் ... அதான் அவங்களுக்குள்ள அடிக்கடி சண்ட ஆனா அஷ்வின் முன்ன மாதிரி இல்ல அவன் கிட்ட நிறைய மாற்றம் தெரியுது இப்போ...அதனால தான் நான் அவங்க விஷயத்துல தலையிடுறதில்ல " என்க

மீரா"அதெல்லாம் ஒகே ஆனா சஞ்சனா அக்கா " என்க

" அவங்களும் இவன பத்தி முன்ன பின்ன எதுவும் தெரியாம அவங்க அப்பா அம்மா சொன்னதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க... ஆரம்பத்துல இவன் என்ன சொன்னாலும் எதிர்த்து பேச மாட்டாங்க ஆனா இப்போ எல்லாம் தலைகீழாக இருக்கு" என்றான் குறும் புன்னகையுடன்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Donde viven las historias. Descúbrelo ahora