அத்தியாயம் 33

1.9K 81 46
                                    

மறு நாள் காலையும் அழகான தன் விடியலை காண...வழக்கம் போல அஷ்வினை எழுப்புவதற்காக... குப்புறப்படுத்திருந்த அவனது முதுகை தட்ட இன்று ஏனோ வழக்கத்திற்கு மாறாக " பாப்பா கொஞ்சம் தூங்க விடேன் பிளீஸ் " என்றான் விழிகளை விரிக்காமல்

"பாப்பா என அவன் கூறியதில் உலகம் தலைகீழாக ஏதும் சுழலுகின்றதா என்ன " என்று சந்தேகம் தோன்றியது அவளுக்கு

சிறிது நேரத்தில் எழுந்தவன் இவளைக் கண்டு " ஸாரி" என்க

அவன் கூறிய "ஸாரி" என்கிற வார்த்தையில் ஒரு கணம் நிதானித்தவள் மீண்டும் மனது பரபரப்படைய ஒருவித எதிர்பார்ப்புடன் விழிகளை உயர்த்தி அவனை நோக்கினாள்

நேருக்கு நேராக அவளை ஊடுருவியவன்... ஒரு நிமிஷம் கண்களை மூடித் திறந்து "உன்ன பாப்பானு சொல்லியதை வைத்து இஷ்டத்துக்கு ஏதாவது கற்பனை செய்ய ஆரம்பித்து விடாதே...ஏதோ தெரியாம சொல்லிட்டேன் அதுக்காக மன்னிப்பும் கேட்டாச்சு...உன்னை பற்றி என் மனதில் எந்த எண்ணமும் இல்லை முன்ன எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்பவும் இருக்கேன்
இந்த பிக் பாஸ்ல இருக்கிறவங்க மாதிரி மனசுல ஏதாவது ஆசைய வச்சிட்டு ஏமா தாமான்னு தவிக்காம நகரு" என்று கூறிவிட்டு பாத்ரூமிற்குள் புகுந்தான் அஷ்வின் ராஜ்

அவளது எதிர்பார்ப்பு... மணலில் கொட்டிய நீர் மாதிரி காணாமல் போக தன் வாட்டத்தை வெளிபடுத்தி விடக் கூடாதென்று வெகு முயற்சி செய்து வெற்றியும் கண்டாள்

சில கணங்களுக்குப் பிறகு மனது சமன்படவும் " ரொம்ப நல்லது எப்பவும் இப்படியே இருங்க" என்று அவனை போலவே நிதானமாக சிறு நக்கல் குரலில் கூறிவிட்டு விடுவிடு வென்று வேகமாக நடந்தாள் சஞ்சனா

சிறு தடுமாற்றமும் இன்றி வேகமாக நடந்தவளை பார்க்க பார்க்க முகம் இறுகியது அவனுக்கு

"சரியான நெஞ்சழுத்தக்காரியாக இருக்காளே... இவளும் இப்படியே இருக்கட்டும் அது தான் நமக்கு நல்லது "என்று நினைத்தான் அஷ்வின்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Où les histoires vivent. Découvrez maintenant