விகாஷ் ஒடி வந்து தன் தாத்தாவை கட்டி அணைத்துக் கொள்ள அவரும் இவனை வாரி அணைத்துக் கொண்டார்
விக்னேஷ் " டேய் நானும் இருக்கேன் டா " என்று விகாஷை பார்க்க
விகாஷ் " வாடா வாடா " என்று அவனையும் சேர்த்து அணைத்துக் கொண்டான்
அஷ்வின்" தாத்தா நானும் இருக்கேன் " என்று குரல் கொடுக்க தாத்தாவோ அவனை வா என்று சைகை செய்ய அஷ்வின் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவனை உயர்த்தி " டேய் நீ மட்டும் ஏன்டா விழுற...உன் பொண்டாட்டி கூட சேர்ந்து விழு டா இந்த தாத்தா கால்ல " என்றார்
சஞ்சனா அஷ்வின் பக்கத்தில் வர இருவரும் தாத்தா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்
தாத்தா " டேய் எனக்கு தெரியாம நீ கல்யாணமே பண்ணிட்டியா " என்று விகாஷின் காதை திருக
" ஐயோ வலிக்குது தாத்தா... இனிமே தான் கல்யாணமே " என்று மீராவை பார்த்து கண்ணடித்தான்
சஞ்சனா " தாத்தா விகாஷ் அண்ணாக்கு இன்னும் கல்யாணம் ஆகல ...அச்சோ மீரா என்னோட தங்கச்சி " என்று மீராவை அழைத்து அவளுடன் நிறுத்திக் கொண்டாள்
விகாஷ் " தாத்தா என்னோட கல்யாணம் இருக்கட்டும் மொதல்ல இவனுக்கு கல்யாணம் எப்போ " என்க
விக்னேஷ் " டேய் என்ன பத்தி தான் தெரியும்ல எனக்கு கல்யாணம் செட் ஆகாது... விடுங்க டா என்ன... இப்போ தான் தாத்தா அத பத்தி பேசிட்டு இருந்தாரு " என்றான் சலிப்புடன்
விகாஷ்" தம்பி அப்படி எல்லாம் விட முடியாது...வயது ஏறிட்டே போகுது டா முப்பத தொட்டாச்சு சீக்கிரம் அண்ணி கையால விருந்து வைக்குற வழிய பாரு " என்று நக்கலாக கூற
சஞ்சனா" விகாஷ் அண்ணா உங்கள பத்தி சொன்னாரு..... நீங்க கல்யாணத்த வெறுக்குறீங்களா? இல்ல பொண்ணுங்கள பிடிக்காதா? " என்க
அஷ்வின்" ஏய் " என்று அவளின் கையை பிடிக்க
விக்னேஷ்" டேய் விகாஷ் நீங்க கார்ல வரும் போது என்னோட கதைய தான் ஓட்டுநீங்களா...வேற டாப்பிக்கே கிடைக்கலாயா ?" என்க
YOU ARE READING
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை