அத்தியாயம் 21

2.4K 95 20
                                    

கருமேகங்கள் தவழ்ந்து ஒன்றுடன் ஒன்று மோத பலத்த சத்தத்துடன் இடி முழக்கம் முழங்க மின்னலும் பளீர் பளீர் என்று வீசத் தொடங்கிய.... நேரம் அடை மழையும் அடங்காமல் பெய்யத் தொடங்கியது

அஷ்வின்"ஏய் இதுக்கு தான் நான் வேணாம் வேணாம்னு சொன்னேன் கேட்டியா நீ ... இப்போ பாரு எப்படி மழை கொட்டுதுனு ச்சா" என்றான் கடுப்பாக

சஞ்சனா டக்குனு அவனது தோளில் வைத்திருந்த தன் முகத்தை நேராக்கினாள் ஆனால் கை மாத்திரம் அவனது இடுப்பை வட்டமிட்டபடியே இருந்தது

அஷ்வின்" ஏய் கைய எடுடி ... உன்னால தான் ரெண்டு பேரும் கொட்டுற மழையில குடை கூட இல்லாம நடு ரோட்டுல நிக்கிறோம் .... மொதல்ல வண்டிய விட்டு இறங்கு டி " என்றான் அதே கோபத்துடன்

" உன்ன நம்பி இறங்கலாமா ? நீ பாட்டுக்கு கோபத்துல என்ன நடு ரோட்டுல விட்டுட்டு போய்ட மாட்டியே " என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு

அஷ்வின்"அடடடா நல்ல ஐடியாவா இருக்கே " என்று நினைத்துக் கொண்டே சஞ்சனாவை ஒரு முறை பார்த்துவிட்டு தான் கூற வருவதை கூறத் தொடங்கினான்

" இங்க பாரு எனக்கு இந்த மாதிரி தோண கூட இல்ல ஆனா நீயா ஐடியா கொடுத்து பண்ண வச்சிடாதே ... நான் செஞ்சாலும் செஞ்சிடுவான் உனக்கு என்ன பத்தி நல்லா தெரியும்" என்றான்

சஞ்சனா தன் கண்களை உலாவ விட அங்கே லைட் தூணிற்கு அருகில் செழிப்பான வளர்ந்த பெரிய மரம் ஒன்று அவள் கண்களில் பட்டது உடனே தன்னவனை நோக்கி " இப்போதைக்கு மழை விடுற மாதிரி இல்ல அதனால அந்த மரத்தடியில போய் இருப்போம் மழை விட்டதுக்கு அப்புறம் வீட்டுக்கு போலாம் " என்றாள் வண்டியை விட்டு இறக்கியபடி

அஷ்வின்க்கும் வேறு வழி தெரியவில்லை ஆதலால் அவள் சொன்னது போலவே மரத்தடியில் நிறுத்தினான் வண்டியை அவனும் அருகில் நின்றுக் கொண்டு இருக்க
ஆள் நடமாட்டம் இல்லாத பாதை பத்தாதகுறைக்கு மழை வேற விடாமல் பொழிய சஞ்சனாக்கோ மனதில் லேசாக பயத்தை கெளப்பியது உடனே தன்னவனுடன் சேர்ந்து அவன் அருகிலேயே நின்றுக் கொண்டாள்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Tahanan ng mga kuwento. Tumuklas ngayon