அத்தியாயம் 22

2.3K 86 19
                                    

வித்யா எதுவும் பேசாமல் கையில் பைல் கட்டுடன் அஷ்வின் ரூமிற்குள் நுழைய அவனோ பதறியபடி முழித்தான்

வித்யா" ராஜ் சார் இங்க தான் ஒழிஞ்ச்சிட்டு இருக்கீங்களா" என்ற நக்கலாக கூற

"உங்க கூட தான் ஒட்டும் இல்ல உறவும் இல்லனு வந்துட்டேன்ல மறுபடியும் மறுபடியும் எதுக்கு டி என்ன டார்ச்சர் பண்ணுறீங்க" என்றான் கோவமாக

விகாஷ்" மச்சி கூல் டா... வாட்டர் வேணுமா" என்று தண்ணீர் போத்தலை நீட்ட அதனை வாங்கி தூக்கி வீசியதில் கண்ணாடி பாட்டில் வெடித்து சிதறியது

"உங்க கோபத்த என்னோட பாட்டில்ல தான் காட்டுவீங்க.... இன்னிக்கிகே எனக்கு இந்த மாதிரி பாட்டில் வாங்கி குடுக்குறீங்க இல்ல நடக்குறதே வேற" என்றாள் சஞ்சனா

விகாஷ்" அய்யோ அய்யய்யோ அவங்கவங்களுக்கு அவங்கவங்க பிரச்சின நடுவுல நாம மாட்டிட்டு முழிக்கிறோமே கடவுளே" என்க

எல்லாம் உன்னால தான் என்ற பாவனையில் முகத்தை வைத்தவாறு விகாஷை பார்த்தான் அஷ்வின்

வித்யா" நீ பாட்டுக்கு கோயம்புத்தூர் வந்துட்ட சென்னைல இருக்குற உன் கம்பெனி பிஸ்னஸ் எல்லாத்தையும் அப்பா தானே ஹேண்டில் பண்ணுறாரு உனக்கு அத பத்தி கொஞ்சமாவது அக்கர இருக்கா ச்சா " என்க

சஞ்சனா" என்ன சொல்லுறீங்க கம்பெனி யா இவரோடயா " என்று முழிக்க

வித்யா" உங்களுக்கு ஒன்னுமே தெரியாதா ? டேய் அஷ்வின் இவங்க கிட்ட எதுவும் சொல்லலயா??" என்க
அஷ்வின் முகத்தை திருப்பிக் கொண்டான்

" என்ன தெரியாது ....ஆமா நீங்க யாரு " என்க

வித்யா" நான் இவனோட சித்தப்பா பொண்ணு.. அப்புறம் ரொம்ப நேரம் யோசித்து விட்டு உங்கள எங்கயோ பார்த்திருக்கேனே " என்றாள் அதே யோசனை கலந்த முகத்துடன்

விகாஷ்" ஆ...கீதா கோவிந்தம் படத்துல பார்த்திருப்ப" என்க சஞ்சனா உஷ் என்று சத்தம் கொடுத்தாள்

சஞ்சனா" எனக்கும் உங்கள பார்த்த உடனே இப்படி தான் பீல் ஆச்சு ஆனா எங்க பார்த்தேனு தான் ஞாபகம் வரமாட்டேங்குது " என்றாள்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now