அத்தியாயம் 19

2.4K 104 35
                                    

சஞ்சனா சென்று கதவை திறக்க ... தனது இரண்டு கைகளையும் பின்னால் வைத்து ஏதோ மறைத்தவனாய் சிரித்துக் கொண்டே உள்ளே வந்தான் சித்தார்த்

சஞ்சனா" சித்து என்ன கையில மறைச்சிட்டு இருக்க ? காமி பார்க்கலாம்" என்க

" இது உன்னோட சின்ன வயசுல போட்டோஸ் இருக்கிற ஆல்பம் கா" என்றான்

சஞ்சனா" இப்போ எதுக்கு இது.. போய் இருந்த இடத்துலே வச்சுட்டு வா " என்று அன்பான வேண்டுகோள் விடுக்க அவனோ முடியாது என்று அழுத்தமாக கூறினான்

சித்தார்த்" மாமா நீங்க ஏன் அமைதியா இருக்கீங்க.... இந்தாங்க எங்க அக்காவோட போட்டோஸ் பாருங்க" என்று ஆல்பத்தை நீட்ட சஞ்சனா வேணாம் என்று விடாப்பிடியாக நின்றாள் ஆனால் அவளது பேச்சு ஏற்றுக்கொள்ளப்படவில்லை

சித்தார்த்" அட புடிங்க மாமா... நானும் எவ்ளோ நேரம் தான் நீட்டிட்டே இருக்கிறது" என்று அஷ்வின் கையில் வைத்தான் ஆனால் அஷ்வின் ஆல்பத்தை பிரித்து பார்க்கவில்லை

சித்தார்த்" அட இதையும் நான் தான் சொல்லனுமா பிரிச்சு பாருங்க மாமா... " என்க அஷ்வின் அப்புறம் பார்க்கலாம் என்று அலட்சியமாக கூறினான்

"என்ன மாமா எதுக்கெடுத்தாலும் வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கீங்க ஒரு விஷயத்த புரிஞ்சிக்கொங்க மச்சினி துணை இருந்தா மலையே ஏறலாம் ஆனா மச்சான் துணை இருந்தா இமாலயமே ஏறலாம்" என்று மூச்சு விடாமல் கூற இவனது அதட்டல் தாங்காமல் ஆல்பத்தை பிரித்தான் அஷ்வின்

ஆல்பத்தின் முதல் பக்கத்தில் இரண்டு ஜடை பின்னலில் வால் போன்ற புருவங்களுக்கு மத்தியில் சிறிய வட்ட வடிவ போட்டுடன் துப்பட்டாவை வீ டிஸைனில் அணிந்து பாடசாலை ஆடையில் பதினாறு வயது பருவ மங்கையாய நின்றுக் கொண்டு இருந்தாள் சஞ்சனா தேவி

ஆல்பத்தின் எல்லா பக்கங்களையும் வேண்டாவெறுப்பாக புரட்டிப் பார்த்தான் அஷ்வின்

சித்தார்த்" என்ன மாமா நீங்க ஒரு போட்டோவ கூட ஒழுங்கா பார்க்கல " என்று வினவ

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now