"புடிச்சிருக்கா ?" என அஷ்வின் வினவ
"ஆமா" என்றாள் சஞ்சனா குனிந்த தலை நிமிராமல்
மெதுவாக அவளது காதோரம்" என்னையா இல்ல இந்த வாட்ச் வளையல் லா " என்க
தன் காதிற்கு சரியாக தான் கேட்டதா என தெரியாமல் முழிக்க " இல்ல புடிச்சிருக்கானு கேட்கும் போது ஆமா னு சொன்னியே அதான் என்ன புடிச்சிருக்கு என்னையா இல்ல இந்த வாட்ச்சா?" என்றான் மீண்டும் அஷ்வின் ராஜ்
சஞ்சனா பதில் சொல்ல முடியாமல் திணற இவர்கள் இருவரையும் தனியாக விட்டுவிட்டு மற்ற மூவரும் வேறு இடம் சென்றனர்
அஷ்வின்" அவங்க போயிட்டாங்க... இப்போ சொல்லு" என்றான் விடாமல்
"என்ன சொல்ல" என்றாள் சஞ்சனா
"ஏய் ஒரு மனுஷன் நார்மலா இறங்கி வந்து உன் கிட்ட பேசுறேன் வெறுப்பேத்தாம சொல்லிடு" என்றான் அஷ்வின்
சஞ்சனா " ம் எனக்கு உன் பார்த்துக்கிட்டே உன் கிட்ட பேசிக்கிட்டே இப்படி வம்பு இழுத்துக்கிட்டே என் வாழ்க்க ஃபுல்லா உன் கூடவே இருக்கணும்
எனக்கு நீ ஒகே தான் ...சரிய் புடிச்சிருக்கு ஐ லவ் யூ சொல்லலாம்னு பார்த்தா அந்த அளவுக்கு எனக்கு இன்னும் உன்ன புடிக்கல ஆனா அப்படி ஒரு ஐ லவ் யூ சொன்னா கூட அன்னைக்கும் நான் உன் கிட்ட இப்படி தான் வந்து சொல்லுவேன்...
எனக்கு உன்ன புடிச்சிருக்கு ஆனா உனக்கு தான் என்ன புடிச்சிருக்கானு தெரியல ... உனக்கு என்ன புடிக்கிற அன்னைக்கு நீயும் என் கிட்ட வந்து சொல்லலாம் ம் சரியா" என்று கூறஅஷ்வினின் கண்கள் கலங்க இடுப்பில் கையை கட்டி மேலே பார்த்தவாறு வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டான்
" எனக்கு தெரிஞ்சு நான் எதுவும் தப்பா பேசலனு நினைக்கிறேன் உனக்கு நான் பேசினது எதுவும் தப்பா பட்டிருந்தா ஸாரி " என்றாள் சஞ்சனா
விகாஷ்" ஹேய் வித்யா... உங்க அப்பா உன்ன தேடி நேரா இங்க வந்து நிப்பாருனு பார்த்தா வரவேயில்லை மனுஷன் " என்க
YOU ARE READING
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
Romanceதன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை