அத்தியாயம் 37

1.8K 74 31
                                    

பின் சாப்பிட்டு முடித்தவுடன் மீண்டும் லேப்டாப்பில் கவனமாகும் போது சஞ்சனா பீரோவை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்ததை கவனித்தவன்

" ஏய் என்ன பண்ற..." என்றான் அவள் எதையோ தீவிரமாக தேடுவதை உணர்ந்தவன்

"இல்ல அது வந்து..." என்று விட்டு மீண்டும் பீரோவை அலச
இம்முறை லேப்டாப்பை கட்டிலில் வைத்துவிட்டு அவளிடம் வந்தவன்

"என்ன தேடுற... நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா " என்றான் மெல்லிய குரலில்

"இல்ல வேணாம் நான் பார்த்துக்கிறேன்" என்றாள் டென்ஷனாக

"எதுக்கு டென்ஷன் ஆகுற... ஓவர் டென்ஷன் உடம்புக்கு ஆகாது சின்ன வயசுலயே பீபி வந்துவிடப் போகிறது" என்றான் நக்கலாக

ஒரு பார்வை அவனை பார்த்துவிட்டு " ச்சா அம்மா எங்க வச்சாங்களோ ... எனக்கு அதெல்லாம் எவளோ முக்கியம்னு அம்மாக்கு தெரியும் தானே எல்லாம் போச்சு" என்று நெற்றியை தாங்கியவாறு இருக்க

மெதுவாக அவளது கையை பற்றியவன் " உனக்கு ரொம்ப முக்கியம்னா அத்தைக்கு போன் போட்டு எங்க இருக்குன்னு கேட்டு பாரேன்" என்க

"வேணாம் ஒருவேளை அம்மா வீசியிருப்பாங்களோ என்னவோ
நான் போன் போட்டு கேட்டால் அதனை இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா என்று என்ன தான் திட்டுவாங்க ... நான் இங்கு இருக்கும் போது பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்" என்றாள்

"உனக்கு முங்கியம்ங்குற போது அத்தை ஒரு நாளும் அதை வீசியிருக்க மாட்டாங்க... இங்க தான் இருக்கும் தேடி பாரு " என்க

அவளும் மீண்டும் ஒரு முறை தேடுவதற்காக எழுந்தாள்

"ஒரு நிமிஷம் .....நானும் கேக்கல நீயும் சொல்லல ஆனா நீ இவளோ பீல் பண்றப்போ அது என்னன்னு எனக்கு கேட்க தோணுது என்ன அது ?" என்றான் அஷ்வின்

திரும்பி அவனை பார்த்தவள்

"இல்ல நீ என்ன ஏதுன்னு சொன்னா எனக்கும் அதைத் தேடுவதற்கு வசதியாக இருக்குமே " என்றான்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Where stories live. Discover now