அத்தியாயம் 42

1.9K 72 33
                                    

" நான் சொல்லுறத சொல்லிட்டேன் என் முடிவுல எந்த மாற்றமும் கிடையாது ... உங்களுக்கு நான் இங்க இருக்கிறது புடிக்கலனா முகத்துக்கு நேராக சொல்லிடலாம் நான் போயிடுவேன்" என்றாள் கோபமாக

" ஏய் அப்படி என்ன நடக்கக் கூடாதது நடந்த மாதிரி ரொம்ப ஓவரா பேசுற ...ஒத்துக்குறேன் நான் முன்னெல்லாம் உன் கிட்ட நடந்த விதம் தப்பு தான் அதை நான் இல்லைன்னு சொல்லலையே அதுக்காக மன்னிப்பும் கேட்டாச்சு இப்போ என்ன உன் முகத்துக்கு நேராக நின்னு என்ன மன்னிச்சிடுன்னு கெஞ்சனுமா சொல்லு சொல்லு டி " என்றான் தனது குரலில் அடங்கியிருந்தன கோபத்துடன்

" யாருக்கு வேணும் உன் மன்னிப்பு... நீ மன்னிப்பு கேட்ட உடனே நீ செஞ்சது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா இல்ல அவளோ சீக்கிரம் என்னால மறைக்க தான் முடியுமா ?
எங்க வீட்டுல அம்மா அப்பாவுக்கு எதுவும் தெரிய வேணாம்னு தான் அவங்க முன்னாடி எதுவும் காட்டிக்காம உன் கூட கிளம்பினேன் அதுக்காக உன் கூட சேர்ந்து வாழ்ந்துடுவேன்னு மட்டும் நினைக்காதே..." என்றாள்

" நீ எதை எதையோ மனசுல வச்சு பேசிட்டு இருக்க... நான் உன் கூட சண்ட போடும் போதெல்லாம் நீயும் தானே ஏட்டிக்குப் போட்டியாக பேசுன ... நமக்கு கல்யாண ஆன அன்னிக்கு கூட உனக்கு முகம் கொடுத்து பேசமா முகத்த திருப்பிட்டு தானே நின்னேன் அப்போவே இவன் எனக்கு வேணாம்னு சொல்ல வேண்டியது தானே ம்ஹூம் அதுவும் இல்ல சரி இங்க வந்தப்போவாவது உன் கிட்ட தினம் தினம் எரிச்சல தானே கொட்டினேன் அப்போதாவது கிளம்பி போக வேண்டியது தானே அதுவும் இல்ல அதுகூட வேணாம் என் வாயாலயே நீ எனக்கு வேணாம் தயவு செஞ்சு என்ன விட்டு போயிடுனு நானே எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன் அப்போ வராத கோபம் இப்போ மட்டும் எங்கிருந்து வந்தது ச்சே " என கூறிய வண்ணம் அருகில் இருந்த பூச்சாடியை கீழை போட்டு உடைத்தான்

இவர்களுக்கு இடையிலான அக்கினி சிறகுகள் சிதற பேசிய அனைத்து வார்த்தைகளும் ஹாலில் அமர்ந்திருந்தவரின் காதுகளுக்கு எட்டியது

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓حيث تعيش القصص. اكتشف الآن