அத்தியாயம் 23

2.3K 88 20
                                    

தன் ஒவ்வொரு அடிகளையும் முன்னோக்கி நகர்த்தியவளின் மனதிற்குள் தன் பின்னால் யாரோ தொடருவது போன்ற உணர்வு விட்டபாடில்லை ...
திரும்பி பார்ப்பதற்கும் பயத்துடன் தனது நடைய முன்னோக்கினாள்

"ய யா யாரு இருக்கீங்க மரியாதையா வெ வெளிய வாங்க ...." என்க

யாரோ பலத்த சத்தத்துடன் கடும் குரலில் சிரிப்பது போல எட்டியது அவளது செவிகளுக்கு

" சொல்லுறேன்ல யாரு...யாரு...யா யாரு அங்க ....வா வாங்க யாரு ய யாரு வெளிய வாங்க " என்று கூறிக் கொண்டே டேபிள் மேல இருந்து கத்தியை கைப்பற்றினாள்

" ஏய்.....என்ற கடுமை கலந்த குரலில் கூறிவிட்டு மீண்டும் சிரிக்க " இந்த தடவை அச் சிரிப்பு சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது

ஏய் யா யாரு நீ..... இப்போ வெளிய வரல நடக்குறதே வேற....கை கையில கத்தி இருக்கு வீனா என்ன கொ கொலகாரி ஆக்கிடாதே வா வா வெளிய " என்க........... கையில் கத்தி நடுக்க அதைவிட அவளது குரல் பதற்றத்தில் நடுங்கியது

மீண்டும் அதே சிரிப்பு சத்தம் கேட்க

"என்னது யாரையும் காணோம் பேசாம அஷ்வின் வர வரைக்கும் வெளிய வைட் பண்ணலாமா "என்ற முடிவுக்கு வந்த பின் தான் எங்கே நிற்கிறோம் என்று நோட்டமிட தன் கால்கள் தானாகவே மாடியை நோக்கி புறப்பட்டுக் கொண்டு இருந்தது

உடனே நின்றவள் மாடிப்படி இறங்கி சட்டென ஒடி வர வாசல் கதவு டமாள் என்று மூடப்பட தன் இரு விழிகளையும் இறுக்கி அடைத்துக் கொண்டாள்

வேறு எந்த வித சம்பந்தமும் கேட்காத அமைதி.... கடிகார முற்கள் மாத்திரம் சுழலும் ஓசையில் மின்குமிழின் ஒளியானது துண்டிக்க தன் முகத்தில் வியர்வை தானாகவே குடிகொண்டது அவளுக்கு

தீடீரென்று பின்னால் வந்த உருவம் அவள் காதில பேஹ் என்று ஒசை எழுப்ப நடுங்கியவளாய் கையில் இருந்த கத்தி தரையை நோக்கி விடுபட்டது மீண்டும் அவளது தோளை பிடிக்க தன் கண்களை திறக்காமல் ஆஆஆஆஆ என்று கத்தியபடி கட்டி அணைத்துக் கொண்டாள்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin