அத்தியாயம் 18

2.4K 106 28
                                    

சஞ்சனா மீண்டும் தன் ரூமிற்குள் நுழைய அஷ்வின் இருக்கும் நிலையைக் கண்டு ... " எதுக்குங்க இப்படி இடிஞ்சி போன மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கீங்க அப்படி என்ன தாங்க முடியாத கவல உங்களுக்கு ? நீங்க எப்பவும் சந்தோஷமா சிரிச்சிட்டே இருக்கனும் அது தான் என்னோட ஆசைங்க" என்று தன்னவனின் முகத்தை பார்த்துக் கொண்டே அவளது மனதில் இவ்வாறான எண்ண அலைகள் அலைப்பாய்ந்தது

அஷ்வின் இவள் வந்தது கூட தெரியாமல் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் விழுந்திருந்தான்

சஞ்சனா" என்னங்க எதுக்கு ஏதோ பறிகொடுத்தவங்க மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க" என்று தாழ்மையுடன் வினவ

" ஏய் உன் கிட்ட சொல்லனுமா என்ன உன் வேலைய பார்த்துட்டு போடி " என்று கடுங் கோபம் கலந்த குடலில் கூற

சஞ்சனா" மாட்டேன் உங்களுக்கு என்ன பிரச்சினைனு சொல்லுங்க என் கிட்ட " என்று விடாமல் அதட்ட

" அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் போதுமா ? " என்க

சஞ்சனா" அத ஏன் இப்படி மூஞ்ச தூக்கி வச்சுட்டே சொல்லுறீங்க" என்க

அஷ்வின் தனது மொத்த பற்களையும் இழித்து காட்டி சிரித்துக் கொண்டே" இப்போ போதுமா" என்க

"இதுக்கு நீங்க சிரிக்காமலே இருந்திருக்கலாம் ரொம்ப கேவலமா இருக்கு"என்று வாயை கோணலாக வைத்துக் கூறினாள்

பதிலுக்கு அஷ்வின் முறைக்க ..."யோவ் எதுக்கு முறைச்சு பார்க்குற இப்போ ...நீ இப்படியே முறைச்சுட்டே இருந்தா உன்னோட முகம் அப்பாடியே மாறிப்போயிடும் "என்று குறும் புன்னகையுடன் கூறினாள்

சஞ்சனாவின் போனிற்கு விகாஷ் அழைப்பு விடுக்க ... அட்டன் பண்ணி பேசினாள்

"ஹலோ அண்ணா சொல்லுங்க" என்க

விகாஷ்" உன் பக்கத்துல அஷ்வின் இருக்கானா? அவனோட போன்க்கு நிறைய தடவ ட்ரை பண்ணினேன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது அதனால கொஞ்சம் அவன் கிட்ட போன கொடுமா " என்க அவளும் சரி என்று கூறிவிட்டு அஷ்வினிடம் போனை நீட்டினாள்

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓Onde histórias criam vida. Descubra agora