💕நீயே - 07 💕

205 12 10
                                    


அப்படியே வட்செப் ஸ்டேடஸ் பார்த்துக் கொண்டு இருந்தாள் கயல்.
அவளது பாடசாலை நண்பி ஒருத்தி காதல் தோல்வி அடைந்ததை அவளது ஸ்டேடஸால் விளங்க, கவலை அடைந்தாள் கயல்.
அதில் ஒன்று,
ப்ரேமம் படத்தில் கடைசி கட்டம் வீடியோவில் இருந்தது.

ஹீரோவின் திருமணத்திற்கு அவன் காலேஜ் காலத்தில் உயிராய் காதலித்த மலர் டீச்சர் அவனின் முன்னால்.
அவர்களது அழகிய காதல் வசந்த காலத்தில், அன்று மலர் டீச்சர் ஊருக்கு போகவில்லை என்றால் ஹீரோவின் கரம் சேர்ந்திருப்பாளோ.. என்னவோ.. ஆனால் படத்தின் திருப்பமாக வே விபத்தில் சிக்கிய மலர் டீச்சரிற்கு பழைய நினைவுகள் மறந்து இருந்தது.
இதனால் ஹீரோ பல மன உளைச்சலுக்குள் ஆகி, வேறு வழியில்லாமல் அவர்களது காதல் பிரிந்தது.
மலர் டீச்சருக்கும் திருமணமாகி, இன்று ஹீரோவின் கல்யாணத்திற்கு வந்திருந்தாள்.
ஆனால் இன்று பழைய நினைவுகள் மலர் டீச்சருக்கு திரும்பி விட்டதை அவள் அவனிடம் மறைத்தபடி, ஹீரோவை பார்க்கிறாள் மலர் டீச்சர்.
எவ்வளவு காலம் சென்றாலும் காதலித்து சேராத இருவர் ஒரு தடவை ஒருவரை ஒருவர் சந்தித்தால் பழைய நினைவுகள் அலைமோதும்..
ஒரு நிமிடத்திற்காவது சுயநினைவு இல்லாமல் இருப்பார்கள்.. என்பது யாவரும் அறிந்த உண்மையே..

இந்த கதையை சுருக்கி, அழகிய வீடியோவாக அந்த ஸ்டேடஸ் இருந்தது.
பிண்ணனி பாடலாக,

உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது
காலம் கடந்து போன பின்பு மண்ணில் வாழ்வது

காலம் எந்தன் கைபிடிக்குள் மாட்டிகொண்டது
காதல் என்னை விட்டுவிட்டு எங்கு சென்றது

கடவுள் வந்து பூமி மீது வாழும்போதிலும்
காதல் தோல்வி ஆகும்போது சாக தோன்றிடும்

காதல் இன்றி பூமி மீது வாழ நேர்ந்திடும்
கொஞ்ச நேரம் கூட நரகம் போல மாறிடும்

போடப்பட்டிருந்தது.

இறைவனின் விதியால் காதலிக்கின்ற பலிக்கு எல்லோரும் சேருவதுமில்லை.
சிலருக்கு சிலரை சிலவேளைகளில் விதியின் காரணமாக தியாகம் செய்யவும் வரலாம். அப்படி ஒரு வீடியோ தான் அது.
அப்போ நானும் கௌத்தமை....?? என்று யோசனை போகும்போது,
கௌத்தம் கோல் செய்தான்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now