💕 நீயே - 26 💕

119 8 1
                                    


"கயல், எல்லோரும் இருக்காங்க. போதும்" என்று மெதுவாக விலத்தினான்.
பிறகு கயலை கேக் கட் பண்ண வா போகலாம் என்று கௌத்தம் கூப்பிட அவனது கரத்தை பற்றிக் கொண்டு கேக் அருகே வந்தாள் கயல்.
எல்லோரும் வாழ்த்துப் பாடவே, அவளும் கௌத்தமை பார்த்துவிட்டு கேக்கை வெட்டினாள்.
முதலில் கௌத்தமிற்கு ஊட்டிவிட்டு தன்னோட வேலை செய்யும் பெண்களுக்கும் ஊட்டினாள். மற்ற ஆண்சகபாடிகளுக்கு கேக்கை வெட்டி அந்த ட்ரேயை நீட்டினாள்.

அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த அறையை விட்டு செல்ல,
கயலும் கௌத்தமும் மட்டுமே இருந்தனர்.
"கௌத்தம், என்னடா சொல்லாம கொள்ளாம வந்த?? "
" கயல், உன்ட பேர்த்டே உனக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு எனக்கு தெரியும். அதனால உன்ன சப்ரைஸ் பண்ண வந்தேன்டி."
"தேங்கயூ சோ மச் கௌத்தம். என் வாழ்க்கைல்ல இப்படி ஒரு சப்ரைஸ் பேர்த்டேய கொண்டாடினதே இல்ல. ராம் இப்படியெல்லாம் செய்யனும்னு கனவு கண்டேன்டா. ஆசப்பட்டேன். அவன் என் கூட இருந்த 2வருஷமும் ஏதோன்னு போனது.
ஒருதடவையாவது எனக்கு சரியா 12மணிக்கு கோல் பண்ணி இருக்கானா??
இப்படி கேக் கட்டிங்??? " என்று சொல்ல,
அவளருகே வந்து உதட்டில் கைவைத்து " கயல், இன்னைக்கு உன்ட பேர்த் டே. நீ கவல பட கூடாது. ரொம்ப சந்தோசமா இருக்கனும்னுடி. அதுக்காக தானே இவ்வளவு தூரம் நா வந்தேன் " என்றான் கௌத்தம்.

" அப்பாக்கு எப்படிடா?? "
" இப்ப நல்லம்டி கடவுள்ட அருளோட. ட்ரீட்மெண்ட் எல்லாம் முடிந்து, இனி 6மாதங்களுக்கு பிறகு வர சொன்னாங்க. "
" அப்போ சரி.. நீ எப்படா வந்த?? எனக்காகவா வந்த?? "
" நா வந்தது இன்னைக்கு காலைல்ல. இங்க வர பகல். நல்ல தூங்கிட்டு இப்ப தான் வந்தேன்டி. உனக்காகவும் எனக்காவும்.. என்ட ட்ரைனிங்காகவும்."
" ஒருகிழம பிந்தி வந்திருக்கிறன்னு மேனேஜர் எதுவும் சொல்லவில்லையா?? "
" இல்லடி. நீ இங்கிருந்து போனபிறகு ஒரு கிழம எக்ஸ்ரா என்னை நிற்க சொன்னாரு.. சரி பேர்த்டே ட்ரீட் எங்கடி?? எப்ப தர்ர?? "
" நீயே சொல்லே.. என்ன வேணும்?? "
" நீ தான் வேணும் " என்றான் கௌத்தம் குறும்பாய்.
" என்னடா சொன்ன?? "என்று சற்று அதிர்ந்து கேட்க,
" இல்லடி நாளைக்கு லீவ் போட்டு எங்காவது போகலாமே.. நல்ல பாபிள் கடல் ஒன்னு பக்கத்துல இருக்கு. அதற்கு சைட்ல நல்ல ஹோட்டலும் இருக்காம். பகல் சாப்பாடுக்கு அங்க போகலாம்" என்று சொன்னான் கௌத்தம்.
"சரி நாளைக்கு பெரிய பில் ஒன்னு எனக்கு வைக்க போற.. சரி சரி. எப்படி போறது?? "
" பைக்ல டி. ஒரு 30 கீலோமீட்டர் இருக்கும். என்ன ஓகேயா?? போன பேர்த்டேய விட உன்ட இந்த பேர்த்டே நல்லா இருக்கும்னு நம்புறேன் " என்றான் கௌத்தம்.

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now