💕 நீயே - 39 💕

130 11 13
                                    


அதே நேரம் சாவித்ரியிடம் சொல்லாத விஷயமொன்றும் கயலின் கௌத்தமின் தலையில் ஒரே நேரத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு,
ஐயரை கூப்பிட்டு திருமண திகதியை இரு குடும்பமும்  பார்த்துக் கொண்டு இருக்கும்போது,
கௌத்தமிற்கு கயல் கோல் செய்து தனியே வர சொன்னாள்.
" கௌத்தம்,"
" என்னடி சொல்லு"
" ஒரு விஷயம் கேட்பேன். ஆனா ஏசக் கூடாது.." என்றாள் அவள்.
" சரி தங்கமே.. என்ன விஷயம்??"
" கௌத்தம், நமக்கு கல்யாண திகதி ஃபிக்ஸ் பண்ண போறாங்களே. அதற்கு முன்னம்???" என்று கயல் கேட்க,
" என்னடா வேறு ஏதாவது முகூர்த்தம் பார்க்க சொல்லனுமா ??" என்று கிண்டலாக கேட்டான் கௌத்தம்.

" இல்ல கௌத்தம்.. ரம்யாக்கு எப்ப கல்யாணம்??? "
" அது எதுக்குடா??? "
" இல்ல சொல்லேன்.."
" இந்த மாசம் 10 ஆம் திகதி.. "
" அப்போ அதற்கு பிறகு நம்ம கல்யாணத்த வைக்கலாமே. "
" ஏன் என்னடி பிரச்சன?? அவள்ட கல்யாணத்துக்கும் எங்கட கல்யாணத்துக்கும் இடைல்ல என்ன சம்மந்தம்?? "
" இல்லங்க. ரம்யாட கல்யாணம் நடந்த பிறகு அந்த பையனோடு சேர்ந்து அவ வாழ ஆரம்பித்த பிறகே, எங்கட வாழ்க்கைய ஆரம்பிக்கலாமேன்னு... " என்று இழுத்தவள்,
" அவள் ஒரு நாளும் உன்ன நினைக்க கூடாது. நமக்கு அவக்கு முதல்ல கல்யாணமும் நடந்தா ரம்யாக்கு அது கட்டாயம் கேள்விப்படும். கொஞ்சம் ஏக்கம், கவல, எல்லாம் வரும்டா.. அதனால அவ கல்யாணத்துக்கு முன்னம் உன்னோட சேர்ந்து நா வாழ தொடங்கினா என்ட மனசுக்கு ஒரு மாதிரி இருக்கும்..." என்று விளக்கினாள் கயல்.
"சரிடா.. என்னமோ யோசித்தெல்லாம் சொல்ற.. இனி அவ பேச்சு நமக்குள்ள தேவல்லடி. உன்ட விருப்பப்படியே செய்யலாம் "என்று அவளை அழைத்து சென்றான்.

" கௌத்தம், கயல், இந்த மாசம் 7 ம் திகதி நல்ல நாளாம்.. " என்று கௌத்தமின் தந்தை சொல்ல,
கௌத்தம் கயல் முகத்தை பார்த்துவிட்டு,
" அப்பா, எனக்கு அந்த திகதி முக்கியமான வேல கொஞ்சம் இருக்கு. வேறு நாள் இல்லையா??? " என்று கேட்க,
ஐயர் பார்த்துவிட்டு,
7ம் திகதி விட 11ம் திகதி நல்ல நாள் என்று சொல்ல,
திருமண திகதியும் முடிவானது...

மனதின் கண்ணாடி நீயே.. (completed) Where stories live. Discover now