சுவாசம்: 22

3.5K 127 74
                                    

            அவர்களை வழியனுப்பிவிட்டு ஸ்ரீராம் சோர்வுடன் சோஃபாவில் வந்தமர்ந்தான்..

ஷ்ருதி அன்னையிடம் பேசுவதற்காக அறைக்கு சென்றாள்.. பேசிவிட்டு அங்கேயே எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தாள்..

சிறிது நேரம் கழித்து கையில் சூட்கேஸுடன் வந்தாள்..

அதை பார்த்த ஸ்ரீராம் திடுக்கிட்டான்..

"என்ன ஷ்ருதி.. எங்க போற..?" என்றான் அதிர்ச்சியாக

"அத்த மாமா பாட்டி எல்லாரும் தான் இங்க இல்லையே..  நான் வேற ரூம் யூஸ் பண்ணிக்கவா ப்ளீஸ்.. " என்றாள்

'அதான் முடிவெடுத்துட்டியே அப்றம் என்ன கேள்வி..?!' என்று எண்ணிக் கொண்டு

"ஷ்யூர் ஷ்ருதி..  " என்றான்

"தேங்க்ஸ்.." என்றாள்

'நல்லவேள நான் கூட அவ அம்மா வீட்டுக்கு தான் போறாளோன்னு பயந்துட்டேன்...' என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்

அவன் ஒரு அறையிலும் அவள் மற்றொரு அறையிலும் வசித்தனர்..

நாட்கள் நகர்ந்தன..
ஷ்ருதி ஒரு தோழியை போல  ஸ்ரீராமுடன் பழகினாள்..

சமையல் உதவிக்கும் மற்ற உதவிக்கும் தேவி என்று ஒரு பெண்மணி சில வருடங்களாக இருந்தார்.. இப்போதும் அவரே தொடர்ந்து வந்தார்..   காலை பதினொரு மணியளவில் வந்து வேலைகள் செய்துவிட்டு செல்வார்.. ஷ்ருதி புதிதாக வந்திருப்பதால்  மாலை ஸ்ரீராம் வந்த பின் தன் வீட்டிற்கு செல்வார்..

ஷ்ருதிக்கு சமையலிலும் வீட்டை சுத்தம் செய்வதிலும் உதவினார்..

ரூமை சுத்தம் செய்யும் போது அவருக்கு சந்தேகம் வந்துவிடும் என்பதால் தன் அறையையும் ஸ்ரீராம் அறையையும் மட்டும் தானே சுத்தம் செய்வாள்.. ஆனால் அவனது ஸ்டடி ரூமிற்கு மட்டும் யாருக்கும் அனுமதி கிடையாது..

வேலைகள் முடிந்த பின் நெட்டில் படம் பார்ப்பது தோழிகளுடன் ஃபோனில் பேசுவது புத்தகங்கள் படிப்பது என்று  பொழுது போக்கினாள்.. ஸ்ரீராம் வந்த பின் அவனுடன் ஏதேனும் பொது விஷயங்களை பேசுவாள்.. 

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡Where stories live. Discover now