பாகம் 10

7.5K 262 66
                                    

நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்.. என்னை ஒரு ஆளாக்கூட மதிக்காத ஒருத்தன போய் எப்படி போய் நான் லவ் பண்ணேன்.. இல்ல இது லவ் கிடையாது.. ஜஸ்ட் ஒரு அட்ரேக்சன் தான்.. இனி அதும் கிடையாது ..
இனி நீ உண்டு உன் வேலை உண்டுனு இருந்துக்க.. அதான் உன் தன்மானத்துக்கும் நல்லது..

இனி எதுக்காகவும் அவன பார்க்க முயற்சிக்க கூடாது..அவ்ளோ தான் கதம்.. கதம்..

என்னையே மதிக்கல. நான் சொன்னதுக்காக கிருஷயா கேள்வி கேக்க போறான்.. பேசாம இந்த மன்த் முடிஞ்ச உடனே வேலைய விட்றனும்..
என தனக்குள் எண்ணிக் கொண்டே பேருந்திற்காக காத்துக் கொண்டு இருந்தாள் மகதி..

இவ்வாறு எண்ணிக் கொண்டு இருக்க இப்போது தான் தன் முகத்திற்கு நேரே யாரோ கையை ஆட்டிக் கொண்டு இருப்பதை உணர்ந்தாள்.. அது வேறு யாரும் இல்லை பாலா தான்..

இதுவரைக் தனக்குள் வைத்திருந்த கோபம் பாலாவைப் பார்த்தவுடன் தவிடு பொடியாக இஇஇஇ என்று இழித்து வைத்தாள்..

இதுவரைக் தனக்குள் வைத்திருந்த கோபம் பாலாவைப் பார்த்தவுடன் தவிடு பொடியாக இஇஇஇ என்று இழித்து வைத்தாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

'
'உனக்கு வெக்கம் மானமே இல்லையா த்துதுூ..' என மனசாட்சி தன்னை அசிங்கப் படுத்த.. எதாவது கோவமா பேச ட்ரை பண்ணு மகதி என தன்னையே தைரியப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள்..

" சார் இப்ப உங்களுக்கு என்ன வேணும் " என்றாள் கோவமாக..

" நேத்து நடந்ததுக்கு சாரி மகதி "

" நீங்க சாரி கேக்கிற அளவுக்கு அங்க ஒன்னும் நடக்கலியே சார் "

" ஓ.. அப்ப என் மேல உனக்கு கோவம் இல்லையா "

" சார் இத ஒரு மேட்டராக் கூட நா நினைக்கல.. போதுமா.. "

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now